இப்போது உள்ள சூழ்நிலைகளில் 100 சதவீதம் பெண்களில் 60 சதவீதத்திற்கு
மேல் பாலிசிஸ்டிக் (polycystic ovary) அதாவது,பெண்கள் கருப்பைக்கு கொண்டு செல்லக்கூடிய
விந்தணுக்களை கருப்பையின் இருபுறங்களிலும் தொடர்புடைய பெண்களின் குறிகளுக்கு உள்ளே
அமைக்கப்பட்டு (இடது,வலது புறத்தில் கர்ப்பபையின் முனையில்) இருப்பது தான் இந்த ஓவரி.
இதன் வேலை தான் கருமுட்டைகளின்
செயல்பாடுகளை கவனித்து வழி அனுப்புதல்,ஆரோக்கியப்படுத்துதல்,ஆண்களின் விந்தனுக்களோடு
பெண்களின் கருமுட்டைகளை இணைத்து கர்ப்பப்பைக்குள் அனுப்பும் வேலை இவற்றை செய்து கொண்டு
இருக்கிறது.அந்த ஓவரி என்று சொல்லப்படும் டியூபில் வேர்க்குரு போன்ற சிறு சிறு கட்டிகள்
அவ்வப்போது தோன்றி மறையும்.
ஆனால், இப்போ உள்ள உணவு முறை பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஜங்புட்,கலோரியஸ்
அதிகம்,அல்லது குறைவாக இருக்கும் உணவுகள்,மற்றும் அதிகமாக உட்கொள்ளப்படும் மருத்துகள்
இதனால் ஓவரியில் தோன்றும் வேர்க்குரு போன்ற கட்டிகள் வளர ஆரம்பிக்கின்றன.
இதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதந்தோறும் சுழற்சியாக வரும்
மாதவிடாய் டைமுக்கு வேலை செய்யாமல் காலதாமதமாக செய்யத்தொடங்குகிறது.இதனால் 27 நாட்களில்
ஏற்படும் மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 40 நாள்,சிலருக்கு 60,90 நாட்கள் கூட தள்ளிப்போக
வாய்ப்புள்ளது.
இந்த கட்டிகளை உடனடியாக கவனித்து,அதற்கு ஹார்மோன் மாத்திரைகள்
எடுத்துக்கொண்டால் உடனடியாக குணப்படுத்தலாம்.சிலர் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.இதனால்
கர்ப்பம் ஆகுவதில் கூட காலதாமதம் ஆகிவிடும் என்பது தான் அதிர்ச்சியான உண்மை.
திருமணம் பந்தம் ஆரம்பிக்கும் போது அங்கே தடங்களாக இந்த பாலிசிஸ்டிக்
ஓவரியின் தொல்லை அங்கே நமக்கு இடையூறாக இருக்கும்.
அதனால் நமக்கு மாதவிடாய் நாள் தவறி வர ஆரம்பிக்கிறது என்கிர
போதே,உடனடியாக கைனகாலஜி மருத்துவரை அணுகி,அவர்களின் ஆலோசனையின்படி டெஸ்ட் செய்து பாலிசிஸ்டிக்
ஓவரி பிராப்ளமாக இருந்தால் உடனடியாக கவனித்துவிடுங்கள்.
அதுதான் கர்ப்பகாலங்களில் பிரச்னைகள் தோன்றாமல் இருக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கை ஆகும்.இதை கவனித்துவிட்டால்.பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பம் ஏற்படுவதில் பிரச்னை
தடுக்கப்பட்டுவிடும்.
அடுத்ததாக தைராய்டு பிரச்னை காரணமாக கூட பெண்கள் கர்ப்பம்
தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படும்.தைராய்டு இரத்தநாளத்திலும்,தொண்டைப்பகுதிகளிலும் தோன்றும்
ஒரு சுரப்பி.அந்த சுரப்பு கூடுதலாகவோ,அல்லது குறைவாக சுரக்க ஆரம்பித்தால் பிரச்னை தான்.
தைராய்டு பிரச்னை ஆண்களுக்குக் கூட வரும்,இதனால் அவர்களுக்கும்
உடல் பருமன்,அல்லது உடல்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது.இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது
உடலில் உள்ள அயோடின் குறைபாடுதான் என்பதாகும்.
அயோடின் நாம் உபயோகப்படுத்தும் அன்றாட சமையல்களில் சேர்த்துக்கொண்டாலே
போதுமானது என்கிறார்கள்.கல் உப்புகளில் அயோடின் அதிகம் இருப்பதால்,சமைக்கும் போது தூள்
உப்பை பயன்படுத்துவதை விட கல் உப்பு அதிகம் பயன்படுத்துங்கள்.
தைராய்டு பெண்களுக்கு கர்ப்பகாலங்களில் பிரச்னை ஏற்படுத்தும்.
கர்ப்பகாலங்களில் உள்ளே வளரும் குழந்தைக்கு உடல் குறைபாடும் ஏற்படும்.போஷாக்கு அற்ற
குழந்தையாகவும் வளர வாய்ப்புள்ளது.எனவே தாமதம் ஏற்படுத்தாமல் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்
உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான முறையான டிரீட்மெண்டில் ஈடுபட வேண்டும்.
அப்போது தான் ஆரோக்கியமான குழந்தையை பெண்கள் பெற்று எடுக்கலாம்.
அடுத்தாக இன்னும் மருத்துவத்தை ஆராயலாம்……
No comments:
Post a Comment