Friday 24 May 2013

பெண்களின் தேவைகள்...!


தேவையான செக்ஸ் தேவைப்படும் நேரத்தில்,சூழ்நிலை கருதியும்,தவிர்க்க முடியாத காரணத்தாலும் தள்ளிப்போடலாம் என்று நினைக்கலாம்..அது தான் நம் இயல்பு வாழ்க்கைக்கும்,கலாச்சாரத்திற்கும் ஏற்றதாக இருக்கக்கூடும்.

இருந்தும் நமக்கு தேவைப்படும் இச்சையுணர்வு கொஞ்சம் தாமதமாக கிடைக்க நேர்ந்தால் நமக்குள் ஒரு சோர்வும்,மனப்பிளவும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆண்கள் பொதுவாக தங்களது காமத்துக்கு முழுமையான திருப்தி கிடைக்கவில்லையெனினும்,ஒரு வடிகாலினை தங்களுக்குள்ளாகவே தேடிக்கொள்கின்றனர்.இது எல்லா ஆண்களிடமுமே இருக்கக்கூடியது தான்.சிலர் மறுக்கலாம்.ஆனால் உண்மை தாங்களுக்கான செக்ஸை அவர்கள் சுயமாக அடைய முடியும்.

இதை ஒரு பெண் சொல்வதால் தவறாக ஆக்கப்படலாம்.ஆனால் பிரபல டாக்டர் பலரின் ஆலோசனையை கேட்டு தான் இந்தமுடிவு உறுதியானது என்பதை அறிந்துகொள்ளமுடிந்தது.

பெண்கள் ஆண்களைப்போல் சுய இன்பம் அடைந்தல் பெரும்பாலும் இல்லை.ஏனெனில் குடும்ப சூழல்,இயற்கை,அவர்களுக்கான மனநிலை எதிர்காலம் எல்லாவற்றையும் கருதி பெண்கள் தங்களை குறுக்கிக்கொள்கிறார்கள்.

ஒருசிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் பெரும்பாலும் தன் கணவர்களிடம் மட்டுமே இன்பத்தை அடைந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதுதான் சரியான வழிமுறை என்பது குடும்பத்தின் பால் ஊட்டப்படும் நம்பிக்கையும் ஆகும்.அப்படித்தான் ஒரு பெண் தன்னுடைய தேவைகளை தன் கணவரிடம் மட்டுமே அடைந்து கொள்ள எண்ணுகிறாள்.அவளது எண்ணத்தை புரிந்து கொள்ளமுடியாமல் சில கணவன்மார்கள் பரிதவிக்கவிடுகிறார்கள்..என்பதே தற்போதைய பெண்கள் சிலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பெண் தன் வாழ்க்கையே சரியாக அமையல,நான் என்ன பாவம் செய்தேன்னு தெரியல,கடவுள் எனக்கு எந்த சந்தோஷத்தையும் தரல..என்பது ரீதியில் பேசிக்கொண்டே போனாள்.

நான் இடைமறித்து உனக்கு என்ன அவ்வளவு பிரச்னை ,ஏன் இப்படி புலம்புற என்று கேட்டபோது அவள் சொன்ன காரணம் ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

இல்ல..நான் அவரையே நம்பிட்டு இருக்கேன்.ஆனா அவர் என்னைக்கண்டுக்கிறதே இல்ல..எப்போ பார்த்தாலும் பேப்பர் படிக்கிறது,டிவி பார்க்கிறது என்று கவனம் முழுவதும் வேறு பக்கமே வைத்து இருக்கிறார்.

நான் ஆசையாக என்ன டிபன்,லஞ்ச் செய்யட்டும் என்று கேட்டால் கூட உன் இஷ்டம்மா…என்று சொல்லி தப்பிச்சுடுறார்.

இதே அவருடைய நண்பர்கள் யாராவது வந்தா மணிக்கணக்கா பேசிட்டு இருக்கார்.அந்த நேரம் நான் அழகா டிரெஸ் பண்ணி அவர் பார்வை படும்படி நின்னாக்கூட கண்டுக்காம நண்பர்களிடம் பேச்சில் சுவாரஸ்யமாயிடுறார்.

எனக்கு என் மேல கோபம் வருது.நான் யாருக்கிட்ட போய் என் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வது என்று அழுது கொட்டித்தீர்த்துவிட்டாள்.

அந்தப்பெண்ணைப் பார்க்க பாவமாக இருந்தது.அவளது எண்ணங்கள் எல்லாம் தன் கணவனைச்சுற்றியே அமைந்து இருப்பதைக்கண்டு வியப்படைந்தேன்.இத்தனைக்கும் டிகிரி முடித்த பெண்..இந்தக்காலத்து பெண் பிள்ளைகள் போல் இல்லையே என்பது வியப்பாக அமைந்தது.

அவளின் முக்கிய பிரச்னை அங்கே தான் தன் கணவரால் கவனிக்கப் படமாட்டேன் என்கிறோம் என்ற ஆதங்கமும்,செக்ஸுவல் தேவை அவளுக்கு கணவனிடத்தில் (அவள்) எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாகத்தெரிந்தது.

அப்பெண்ணின் ஆசை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்.அவளது கணவனுக்கு இவளது எண்ணத்தை எப்படி புரிய வைப்பது என்பது பற்றி அடுத்ததாகப்பார்ப்போம்…

17 comments:

  1. பெண் எழுத்தாளர்கள் தொட தயங்கும் களம்
    உங்கள் தைரியமான எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிறைய பேசவேண்டிய களம்..
    பெரும்பாலும் சம்பிரதாயத்தாலும், அலட்சியத்தாலும் புறக்கணிக்கப்படுகின்றன பெண்ணின் தேவைகள்..
    துணிச்சலாய் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. உங்கள் இந்த பதிவுகளால் பலரின் பிரச்சனைகள் தீரும்....

    உங்கள் துணிச்சல் பாராட்டுக்குறியது...

    ReplyDelete
  4. விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு

    நன்றி..

    ReplyDelete
  5. pala nerangalil veettil pengalidam pesamal iruppadhuvey nallathu yentru ninaikkiren.. visayam ontragavey irunthalum pengal yenna moodeil irukkirargalo atharku thaguntharpola artham kondu vidugirargalo yenpathu yenakku oru doubt.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான்...அவர்களை இயல்பு நிலைக்கு மாற்றி,தங்களது எண்ணத்தை தெளிவாக விளக்கினால் புரிந்துகொள்பவர்கள்...கண்டிப்பாக புரிந்துகொள்வார்கள்.

      Delete
  6. கம்பி மேல் நடந்துள்ளீர்கள்... மிக கவனமாக! அந்த கவனம் எப்போதும் இருக்கட்டும் சகோதிரி. வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    ReplyDelete
  7. எல்லா ஆண்களுக்கும் தன் மனைவிய திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டு .இயற்கை வேற விதமாக படைக்கபட்டுள்ளது .காமத்தில் ஆண் தான் இயங்குபவனாக உள்ளான் .பெண் பெற்றுகொள்ளும் நிலையில் உள்ளார் இதுதானே சிக்கல் .என்னதான் மணைவியின் மேல் பாசம் இருந்தாலும் அவள் உடல் மேல் கவர்ச்சி குறையதான் செய்யும் .முதலில் ஆணுக்குதான் உணர்வு வரவேண்டும் அதற்காகதான் ஆண்கள் வெளி பெண்களை ரசிக்கவும் இதுதான் காரணம் .அதிகமாக நீலபடங்கள் பார்க்கவும் எழுத்துருவில் படிக்கவும் காரணம் ஆகிறது .

    ReplyDelete
    Replies
    1. இதே எண்ணம் பெண்களுக்கும் உண்டு.ஆதவன்.பெண்கள் தங்கள் குடும்பச்சூழல்,கணவன்களின் மேல் உள்ள அன்பு இவற்றால் வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.உங்களுக்கு அடிக்கும் போர்,அல்லது அலுப்பு,மனைவிகளுக்கு வராது என்று சொல்லமுடியாது.ஆண்கள் வெளிப்படுத்த கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கலாம்.பெண்கள் கட்டுப்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறார்கள்.இது தான் உண்மை...

      Delete
  8. பெண்கள் சொல்ல தயங்கும் விஷயத்தை வெளிப்படையாக பேசியதற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. ஆண் பெண் இருவருமே மனமுவந்து மகிழ்ச்சியில் இணைவதே சிறந்த உறவாகும். இருவரில் ஒருவருக்கேனும் இணைய விருப்பமில்லை எனில்,ஒதுங்கிக் கொண்டு பிறகு பார்க்கலாம் என்ற எண்ணத்தை அல்லது காரணத்தை முதலில் வெளிப்படுத்திவிடுதல் முக்கியமானதாகும். உடல் சோர்வாக இருந்தாலும் மருத்துவ ரீதியாக விருப்பமில்லாமல் இருக்கும் என்பதையும் கவணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உறவில் விருப்பமின்மை என்பது பெரும்பாலும் மன அழுத்தமே காரணம். இதை தவிர்க்கும் பக்குவம் இருவருக்கும் ஏற்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சர்ச்சைகளை மறந்து மனம் விட்டு பேசி மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.அதற்கு இருவரும் விட்டுக் கொடுக்கும் எண்ணத்தை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளைக் கடைப்பிடிப்பதால் இருவருக்குமே மகிழ்ச்சியும்,திருப்தியும் உண்டாகும் வாய்ப்பும் மேலும் பல தவறுகளிலிருந்தும் விடுபடவும் வாய்ப்புகள் உண்டு. இந் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் துணிவுமிக்க பெண் எழுத்தாளர் சகோ.பிரதிபா அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

    இனியவன்......

    ReplyDelete