Sunday 28 April 2013

அந்தரங்கம்....


முக்கியமாக கணவனுக்கும்,மனைவிக்கும் என்ன மாதிரி பிரச்னைகள் தலை தூக்குகின்றன என பார்த்தால்..ஒன்று அவர்களது பெற்றோர்,உற்றோர் பிரச்னைகளாக இருக்கும்,

இன்னொன்று பணப்பிரச்னையாக இருக்கும்.இதெல்லாம் தவிர்த்து மிகப்பெரிய பிரச்னையாகத் தோன்றுவது கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் காமத்துக்கான பிரச்னைதான்.

காமம் என்று வரும் போது பெண்ணோ அல்லது ஆணோ ஒருவருக்கொருவர் தங்கள் உடலளவில் ஒன்று சேர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்..அல்லது இருந்தும் அதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம்.

அல்லது கள்ளக்காதல் பிரச்னையாக இருக்கலாம்.இன்னொன்று குழந்தைகள் வளர்ந்துவிட்டனர்.இனி நமக்கு இது தேவைதானா என்பது போன்ற பிரச்னைகளாக இருக்கலாம்.

இதில் எல்லாம் முக்கியமாக ஆண்களை விட பெண்களே தங்களது ஆசைகளை கட்டிப்போட்டுக்கொண்டு,அந்த எதிர்பார்ப்பை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்,அந்தக் கோபத்தை எப்படிக்காட்டுவது என்று புரியாமல் தங்கள் கணவர்களிடமோ.,அல்லது குழந்தைகளிடமோ காட்டத்தொடங்கி விடுகின்றனர்.

இதனால் வீட்டில் பிரச்னைகள் தான் அதிகமாகுமே தவிர,தன்னுடைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது.
தன்னுடைய ஏக்கங்களை வெளிப்படுத்தினால் எங்கே தான் தவறானவள்,அல்லது திமிர் எடுத்தவள் என்று தன் கணவர் நினைத்துவிடுவார் என்ற பயம் காரணமாக வெளிப்படுத்த தயங்குவாள்.

இல்லையெனில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எல்லா வேலையும் முடித்து படுக்கச்செல்வதற்குள் அசதியாக உணர்ந்து,இந்த நேரத்தில் இது தேவையா என்பது போல் தோன்றி அயர்ந்து தூங்கிவிடுவாள்.

உடலில் உள்ள இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை டாக்டர்களே வலியுறுத்துகின்றனர்.தங்களுக்கு கிடைக்கும் சிறிது நேர சந்தோஷம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்த்துகிறார்கள்.

ஆண்கள் சிலர் தங்களுக்கு ஏற்படும் தாபத்தை மனைவியிடம் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களிடமோ,அல்லது சுயமாகவோ சந்தோஷம் அடைந்துவிடுவார்கள்.

ஆனால் பெண்களுக்கு அதற்கான வாய்ப்புக் குறைவு.எனவே தங்களது ஏக்கங்களை ஏக்கப்படுத்திக்கொள்ளாமல்.தன் கணவரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.இது மனநிம்மதியை கொடுக்கும்.

அதற்கு மாறாக அடுத்தவரிடம் தவறாக உறவு கொள்வதன் மூலம் தன் பிள்ளைகளுக்கும் இனி வரும் சந்ததியினருக்கு ஒரு வரலாற்று கேள்விக்குறியாக ஆக்கப்படுவீர்கள்.

கணவனால் சுகம் கொடுக்கமுடியவில்லை உடல் ரீதியாக பிரச்னையெனில்,டாக்டரிடம் காண்பித்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.இல்லை டைவர்ஸ் செய்துகொண்டு மறு திருமணம் பண்ணிக்கொள்ளலாம்.

இதைச் சொல்வதால் எல்லோருக்கும் தவறாகத்தோன்றலாம்.ஆனால் உடல் தேவை முக்கியமில்லையெனினும்,அது ஒரு ஏக்கமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கமுடியாது.ஒரு வயது வரைதான் இந்த இன்பங்கள் கிடைக்கும்.50 வயதுக்குமேல் இந்த இன்பங்கள் தேவையற்றதாகி விடும்.

வாழ்வில் எல்லாமே காலப்போக்கில் சரியாக்கிவிட வேண்டுமே தவிர அதை தவறானதாக ஆக்கிவிடக்கூடாது.

இது அக்காலத்திலிருந்து சித்தர்களும் அறிஞர்களும் சொல்லக்கூடியதே,திருக்குறளில் காமத்துப்பால் எனும் அதிகாரமும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன..

போகும் போக்கில் சந்தோஷத்தை அனுபவிப்பதை விட தன் இணையரிடம் சந்தோஷமான காமத்தை அனுபவிக்க வேண்டும்.அதற்குத் தக்கவாறு நம்மை ஆக்கிக்கொள்ளவேண்டும்.

இதற்கென்றே அலையாமல்….ஆனால் இதற்காக அமைத்துக்கொள்ளுதல் ஒரு குடும்பத்தை நல்லமுறையில் வழிநடத்த ஏதுவாக இருக்கும்.
எது ஒன்றும் காமமாகவே மட்டும் நோக்காமல் காதலுடன் காமமாகப் பார்க்க வேண்டும் ஒவ்வொரு தம்பதியினரும்…..

தொடரும் அந்தரங்கம்..

Friday 26 April 2013

கள்ளழகரே ஆத்துல நேத்து நல்லா குளிச்சேளா....?




பாவம் வருடா வருடம் தான் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு....நல்லா பயன்படுத்தினேளா...?

நீர் பாவம்…..உம்மை ரொம்ப வெயிலில் அழைச்சுட்டுப் போய்…அதுவும் வேகாத வெயில்ல…ஆட்டிட்டே போய் குளிப்பாட்டுறாங்க…

உம்ம தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் கொண்டு வர்றதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சுடுச்சுனு இப்படி கோவிச்சுட்டு போய் ஆத்துல இறங்கலாமா…?ஏன் இப்படி நடந்துக்குறேள்..உங்களுக்கு என்று எங்கிருந்து தான் ஓய் கோபம் பொத்துக்கிட்டு வந்துடுது..அதுவும் வருடந்தோறும்..நேக்கு புரியள..

சீர் கொண்டு வந்து வாங்கலைனா நல்லதாக்கும்னு நினைச்சுட்டு காசும் மிச்சமினுட்டு சாப்பிட்டு கிளம்பி வந்துட வேண்டியது தானே…..உம்ம ஆத்துக்கு…ஏன் நேரா ஆற்றுக்குப் போய் விழுந்தேள்.நல்ல வேளை ஆற்றுல அப்போ தண்ணி இல்ல…இருந்து இருந்தா உம்ம நெலமைய நினைச்சுப்பாரும்.. ஓய்…

அது சரி அவர் யாரும் ஓய் வீரராகவப்பெருமாள் வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் நீங்க இறங்கும்போது. இவாள் தான் உமக்கு முன்னதாக, வெள்ளிக் குதிரையில் வந்து ஆற்றில் இறங்குவாராமே,

வையாழி நடைபயில்வாராமே.(முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு செல்வதையே இப்படி சொல்வர்). "அண்ணா வாரும்' என உம்மை அழைத்தால் தான் ஆற்றிற்குள் இருந்து நீ வருவீராமே.ஆற்றில் நடுமண்டபத்தில் நீர் எழுந்தருளும்போது, உம்மை வீரராகவப்பெருமாள் மூன்று முறை சுற்றி வருவாராமே.

அவருக்கு உம்ம  சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்வாங்களாமே.அதன்பின் வீரராகவப்பெருமாள் ஆற்றில் உள்ள நடு மண்டபத்தில் இருந்து எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுப்பாளாமே..,அவர் யார் உஅமக்கு சப்சூட் டா நியமிச்சு இருக்கேளா....?இதெல்லாம் எதுக்கும் ஓய் பண்றேள்.

நீர் பாட்டுக்கும் ஏதாவது பண்ணிட்டுப் போய்டுறேள்...அதையே நம்மாளுங்க வருடவருடம் ,”நீர் கோவிச்சுட்டு போறாதா சொல்லி ஒரு செலவு இழுத்து விடுறாங்க ”அரசாங்கத்துக்கு...

அதோட நம்ம மக்கள் எல்லாம் கூட்டத்துல கிடந்து அள்ளல் படுதும் ஓய்..உமக்கே தெரியாதா...?கூட்டமா இருந்தா ஆம்பிளப்பிள்ளைங்க என்னனென்னா பண்னுவாங்கன்னு அவனவன் பொம்பளைப்பிள்ளையாண்டம் நெருங்கி இடிச்சுட்டு போறதும்,அவா மேலக் கையப்போடுறதும்....இதெல்லாம் நன்னாவா இருக்கு...

உமக்குத்தான் சொல்லமுடியாம ஊமையா கிடக்குற...ஆனா பெத்தவங்களுக்கு கூட புத்தியில்லாம...வயசுப்பொண்ணுங்கள அழைச்சுட்டு நீர் ஆத்துல இறங்குறத பாக்க வந்துடுதுங்கோ...அப்போ தான் திருமணம் கைகூடுமாம்...

நீரே..தங்கச்சி கல்யாணத்தை அவசரமா முடிச்சுட்டாங்கன்னு ஆத்துல போய் விழுந்துட்டேள்...ஆனா இந்த முட்டாள் மக்கள் எல்லாம் இந்த திருவிழாவுல கலந்துட்டா தான் திருமணபாக்கியம் கிட்டும்னு சுத்துங்கோ...என்னத்த ஓய் சொல்றது..ஒன்னும் விளங்கல..எனக்கு.

சரி அப்புறம் எப்போ போய் தங்கச்சிய மீட் பண்ணீங்கோ...தங்கச்சி என்ன சொல்லுச்சு....மச்சான் என்ன சொன்னார்...அந்தக்கதை வரவேயில்லையே....அதையும் சொல்லிடுங்கோ..

புதுசா இந்த ஆண்டு பச்சை கலர்ல ஆத்துல குதிச்சேளாமே....?(சாயம் போச்சா என்ன..?)வருடா வருடம் யார் உங்களுக்கு கலர் சூஸ் பண்றாங்க....?
காஸ்டியூம் டிசைனர் யாருனு சொன்னேள்னா......அவங்க மேலிடத்துக்கு வேண்டியவாளானு விசாரிக்கனும் அதான்....

சரி..சரி உம்ம வேலைய பாரும் நெய்வேத்தியம் பண்ணி வச்சு இருப்பா நன்னா சாப்பிட்டு..அப்புறமா....இரவு பள்ளியறை பாடல் பாடுவா...(நம்ம பூசாரி.).கேட்டு சேமமா தூங்கும் ஓய்.......... நான் வரட்டா...?

Thursday 25 April 2013

”தற்”கொலை....?


இரவு நேரம் டீக் கடையில் நின்று கொண்டு இருந்த நட்பு வட்டங்கள்.அதில் ஒருவன் தன் வீட்டுக்கு செல்வதற்கே தனக்கு பிடிக்கவில்லை என்று தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.ஏண்டா அப்படியெல்லாம் சொல்ற..?போடா என்று சமாதானப்படுத்தி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் நண்பர்கள்.

மறுநாள் காலையில் அந்த நண்பன் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கொண்டதாக தகவல் வந்தது..என்ன காரணம்?ஏன் தற்கொலை பண்ணிக்கொண்டான்.என்று யாருக்கும் புரியாமல் விழித்து இருந்தார்கள்.
ஆஸ்பிட்டல் வாசலில்.., அவனது மனைவி மட்டும் அழவும் முடியாமல்,அழாமல் இருக்கவும் முடியாமல் பேந்தப் பேந்த விழித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.

நண்பர்கள் அவளிடம் ஆறுதல் கூறச் சென்ற போது அழுவது போல் பாசாங்கு செய்தாள்.நண்பர்களுக்கு சந்தேகம்.அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகள் தானே இவர்கள்.ஏன் கணவன் இறந்த துக்கம் இவளை அதிகமாக பாதிக்கவில்லை.ஒரு வேளை அதிர்ச்சியில் இப்படி இருக்கிறாளோ என்று நினைந்து பின் அதை மறந்து.நண்பனின், இறுதிச் சடங்கு முடியும் வரை கூட இருந்து விட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.

மறுநாள் மாலை வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வாங்குவதற்காக இறந்த நண்பனின் நண்பன் போலீஸ் நிலையம் சென்றான். பேயரைந்தது போல் திரும்ப வந்து தங்கள் நட்பு குழுவிடனரிடம் தெரிவித்த செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

அடுத்த நாள் காலை போலீஸ் சந்தேகத்தின் பேரில் இறந்தவனின் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

எல்லோருக்கும் அதிர்ச்சி எப்படி இப்படி அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகளில் கணவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய காரணம் எது..? மனைவிக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் என்ன..?என்று துருவித்துருவி ஆராயப்பட்டது.

மறுநாள் காலை செய்தித்தாளில் ”கணவனைக்கொன்ற மனைவி கைது”என்று இரண்டாவது பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.
காரணத்தை தெரிந்துகொள்ள ஆவலுடன் பேப்பரை படித்தனர் நண்பர்கள்.கைதான மனைவியின் பேட்டியாக வந்ததை படித்த போது அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக்..

இதற்காகவா என் நண்பனைக்கொன்றாய் என்று கோபத்தோடு காவல் நிலையம் நோக்கிச் சென்றனர் நண்பர்கள்.
ஆனால் அங்கே அவள் இல்லை.ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தாள்.நல்லவேளையாக அவள் அங்கே இருந்து இருந்தால் நண்பர்கள் பட்டாளம் இணைந்து அவளை கொன்று இருந்தாலும் இருக்கும்..

இனி அவளுக்கான கடுமையான தண்டனை கிடைக்க போராட வேண்டும் என்ற நம்பிக்கையோடும் ,வெறியோடும் நண்பர்கள் அனைவரும் தன் இறந்த நண்பனின் நினைவுகளை சுமந்தபடி கண்ணீர் மல்க அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

இந்தக் கதையில் அவள் எதற்காக தன் கணவனை கொலை செய்தாள்..?கணவன் ஏன் தனக்கு வீட்டிற்குச் செல்வதற்கே பிடிக்கவில்லை என்று தான் கொலை ஆகும் முன் தன் நண்பர்களிடம் சொல்கிறான்..?என்பதை நீங்களே கண்டுபிடித்து எழுதுங்கள்..

Wednesday 24 April 2013

பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு


நம் நாட்டின் கலாச்சாரத்தை சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணியவாதிகளாக ஆகிறார்கள்.
நல்ல விசயம் ஆணுக்கு இணையாக நாங்களும் வாழ்வோம் என்ற போக்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவான செயல்தான்.அதற்காக முற்றிலும் ஆண்களைப் புறக்கணித்து புறம் தள்ளிவிட்டு தான் தோன்றித்தனமாக பேசுவது,நடப்பது எந்த வகையில் நியாயம்..?
ஒரு பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் அவளால் செய்து கொள்ள முடியும்.அதே மாதிரி ஆண்களுக்கு வேண்டிய அனைத்தும் அவர்களால் செய்து கொள்ளமுடியும்.அப்படி இருக்க….ஏன் இரு(ஆண்,பெண்) இனத்தையும் இணைத்து திருமணம் நடத்திக்கொள்கிறார்கள்?அங்கே என்ன முக்கிய அம்சமாக கருதப்படுகிறது…?
பெண்ணியவாதியாக இருப்பவர்..காதல் வயப்படாமல் இருக்கிறார்களா..?அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களா..?இல்லை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா..?எதுவோ என்ன காரணமோ அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டு காண்பிக்கிறது.
எனக்குத்தெரிந்த ஒரு கவிதாயினி பெண்.,ஆண்கள் மட்டும் இரு பெண்களோடு வாழ்கிறார்கள்.நாம் ஏன் அப்படி செய்யக்கூடாது என்று இரு ஆண்களை மணக்காமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தார்.நாளடைவில் சக்களத்தி சண்டைபோல் சக்களத்தன் சண்டை வந்து மூவரும் பிரிந்துவிட்டனர்.ஏன் இந்த அவசர முடிவு.
அதேமாதிரி ஒரு பெண் போராளி ட்தான் காதலித்த நபருக்காக மாசமாக இருந்து பின் கருக்கலைப்பு நடத்தி,இன்னொரு ஆணுடன் தொடர்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.இவர்களுக்கு என்ன தான் வேண்டும்.பெண்ணியம் என்பது இதைத்தான் கற்றுக்கொடுத்தா..?
அதற்காக ஆண் வர்க்கத்திற்கு ஆதரவாக நினைக்க வேண்டாம்.ஒழுக்கம் என்பது இருபேருக்கும் உரித்தானது தான்.ஆண்களை தண்டிக்கிறோம்,அல்லது பழி வாங்குகிறோம் என்ற பெயரில் பெண்கள் தங்களை இழிவு படுத்திக்கொள்ள வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.
பெண்ணியவாதியாக கடைசி வரை இருந்து காலம் சாதித்தவர்கள் எத்தனை பேர் வெற்றியாளராக வளம் வருகிறார்கள்.கூறுங்கள்.ஆண்களின் ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும்.நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்.என்பது மட்டுமே (ஒருசிலரை தவிர) மற்றவர்களுக்கு லட்சியமாகத் தெரியவில்லை.
அதிலும் சில பெண்ணியவாதிகள் பல பேரோடு தொடர்பு படுத்தி,தங்களது அந்தரங்க படங்களை வெளிப்படுத்தி,தங்களது நட்புக்களுடன் அசிங்கப்படுத்தி (ஆதாரங்களுடன்) பேசப்படுகிறார்கள்.தேவையா இந்த அநாகரிகமான செயல்பாடுகள்.ஒவ்வொரு பெண்ணுக்கும்,ஆணுக்கும் தனிமனித ஒழுக்கம் தேவை.அது இல்லாவிட்டால்.,நம் நாட்டின் பல பேர் பல பேரோடு கூடிவாழ்வதன் மூலம் பிற்கால சந்ததியினருக்கு உதாரண சீர்கேட்டாளர்களாகத்தான் ஆக்கப்படுவோம்.
தனிமனித சுதந்திரம் வேறு,தனி மனித ஒழுக்கம் வேறு,தனி மனித பண்பாடு வேறு இதை தவறாக புரிந்து கொள்ளாமல்.,படுபாதகமாக பயன்படுத்தாமல் இருக்கும் வரை எல்லாப்பெண்களும் பெண்ணியவாதிகள் தான்.அடக்குமுறைக்கு அடங்காமல் தானும் அடுத்தவர்களை அடக்காமல் வாழ்தல் ஒரு பெண்ணுக்கான அழகு.
பெண்ணாதிக்க வழிக்கு பெண்களை தூண்டுவதே ஆண்கள் தான்.அந்தப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொண்டால்…பெண்கள் தங்களின் “யாருக்கும் செவி சாய்க்காத” முடிவை மாற்றிக்கொள்வர்.
ஆதிக்கம் என்ற வார்த்தையே ஒருவரை அடக்குதல்.அவர் மீது ஆதிக்க செலுத்துதல் என்றே பொருள்படும்.என்பது பொதுவான கருத்து.ஒருவர் மீது ஆதிக்கம் செய்யும் போக்கை கைவிட்டு,நல்ல நடவடிக்கையின் மூலம் பிறரது அன்பையும்,சுய சிந்தனை மூலம் நல் எண்ணங்களையும்,சுய ஒழுக்கத்தின் மூலம் நற் பேரையும் எடுக்க ஒவ்வொரு ஆண் ஆதிக்கவாதியும் பெண்ணாதிக்கவாதியும் எடுக்க வேண்டிய முக்கியமான பணியாகும்.
சொல்லும் பொருளை புரிந்து கொள்ளுதல்..,எடுத்துக்கொள்ளுதல்..,நடத்திக்கொடுத்தல் இது தான் பொருள்பட புரிதல்…..இதை எல்லாம் தங்களைப் பெண்ணியவாதிகளாக வெளிக்காட்டிக்கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்…….நாளைய எதிர்காலம் ....நோக்கி…………

Tuesday 23 April 2013

குடும்ப உறவுகள்



ஒரு ஊரில் ஒரு வயதானவர் இருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள்,இரண்டு மகள்கள்.மனைவி சமீபத்தில் தான் இறந்தார்.சொந்த வீடு இல்லை.எல்லோரையும் கட்டிக்கொடுத்ததில் எல்லா சொத்தையும் விற்றாகிவிட்டது.இன்று வெறும் ஆள் அந்த மனிதர்<P>.
அவரது வாழ்க்கையில் செய்த ஒரே ஒரு தப்பு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல்,எல்லாம் பிள்ளைகளுக்கு,பிள்ளைகளுக்கு என செய்தது தான்.<P>
மனைவியிடமிருந்த கொஞ்சநஞ்ச நகையும் விற்று மனைவியின் டிரீட்மெண்டுக்கு செலவளித்தாகிவிட்டது.இன்று மனைவியும் இல்லை.கையில் காசும் இல்லை.<P>
முதல் பையன் என்ஜினியர்.அவரது மனைவி டீச்சர்.இரண்டு பெண் குழந்தைகள்.அங்கே சென்று தங்கினார்.ஒருவாரம் தான் இருக்கும்.மருமகள் பெட்ரூமில் பேசுவது ஹாலில் படுத்து இருக்கும் இவருக்கு நன்றாகக் கேட்டது.<p>
நமக்கு என்ன சொத்து எழுதி வச்சார் உங்க அப்பா.இப்போ வந்து உட்கார்ந்து சோறு சாப்பிடுகிறாரே வெட்கமாயில்லை.இதெல்லாம் ஒரு பொழப்பு.நானும் தான் இந்த வீட்டில் சம்பாதிக்கிறேன்.எனக்கு எல்லா உரிமையும் உண்டு.உங்கப்பா இந்த வீட்டில் தங்கினா,எல்லா வேலையும் செய்து சாப்பிடட்டும்.இல்லைனா இவருக்கு எல்லாம் நான் வடிச்சு கொட்டிட்டு இருக்க முடியாது.நான் வேலைக்குப்போறதா..?இல்ல உங்க அப்பாவுக்கு பணிவிடை செய்துட்டு இருக்கிறதா?இம்பாஸிபில்..என்னால முடியாது.<P>
தன் மூத்த பையனின் சத்தமே கேட்கவில்லை.என்ன பண்ணுவது அவனுக்கு அவன் அப்பாவால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.சொத்து இருந்தாலாவது மனைவியின் காலில் விழுந்து கெஞ்சியாவது கேட்டு இருப்பான்.சொத்தும் இல்லை..அதனால் சொந்தமும் இல்லை என கிளம்பிவிட்டார் தன் இரண்டாவது மகன் வீட்டிற்கு.<P>
இரண்டாவது மகன் வீட்டிற்கு செல்லும் போதே சின்ன யோசனை.இவனும் தன் அண்ணனை போல நடந்து கொள்வானோ என்று, வேறு வழி இல்லாததால், போக இடமுமில்லாததால் சின்ன மகன் வீட்டிற்குச் சென்றார்.<P>
அவனும் உள்ளூர் தான்.அங்கே சென்று வீட்டுக்கதவைத் தட்டியதும்.சின்ன மருமகள் தான் கதவைத்திறந்தாள்.”வாங்க மாமா”என்ற மகிழ்ச்சியான வரவேற்பை பார்த்து மனம் மகிழ்ந்தார்.<P>
இரண்டாவது மகன் அவ்வளவாக படிக்கவில்லை.அவனுக்கு படிப்பும் ஏறவில்லை.அதனால் சுமாரான வேலை.மாதவருமானம் ரொம்பக்குறைவு.அதனால் மிகச்சிறிய வீட்டில் இருந்தார்கள். எல்லோரும் ஒரே ஹாலில் ஒன்றாகத்தான் படுக்க வேண்டும்.<P>
இரண்டு ஆண்குழந்தைகளுக்கு நடுவில் நான் படுத்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்ச இடம் விட்டு மகனும் மருமகளும் படுத்துக்கொள்வார்கள்.இரண்டு நாட்கள் ஓடியது.மூன்றாம் நாள் மருமகளின் முகம் மாறுபட்டது.கவனித்தார் நான்காம் நாள் சென்றுவிடலாம் என நினைத்தார் எங்கே செல்வது என்ற யோசனையில் ஐந்தாம் நாளும் வந்தது.சாப்பிடும் போது மகன் மெதுவாக ஆரம்பித்தான்”என்னப்பா.அண்ணன் வீட்டுக்கு எப்போ கிளம்புறீங்க” என்று.<P>
நாளைக்கு சென்றுவிடுவேன்,பசங்கள பார்க்கனும் என்றுதான் வந்தேன்.இப்போ சாப்பிட்டதும் கிளம்பிடுவேன் என்று கூறிவிட்டு கண்களில் நீர் கோர்த்ததை மறைத்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.<P>
மறுநாள் விடியக்காலை மருமகளிடம் ”மகனிடம் சொல்லிவிடு.. நான் கிளம்புகிறேன் ,பிள்ளைகளை பார்த்துக்கோம்மா..என சொல்லிவிட்டு கிளம்பினார் பெரியவர்.<P>
பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார்.கையில் இருந்த காசுக்கு தன் இளையமகள் வீடு இருக்கும் ஊருக்கு தான் செல்லமுடியும் பஸ் ஏறினார்.<P>
மகள் ஆசையாக ”அப்பா”என்று ஆசையாக கூப்பிட்டு நன்றாக பேசி,நன்றாக சாப்பாடு கொடுத்து வரவேற்றாள்.மருமகனும் நன்றாகப்பேசினார்.இரண்டுநாட்கள் போனதே தெரியவில்லை.மூன்றாம் நாள் எழும் போதே மாப்பிள்ளையோட அம்மா,அப்பா,தங்கை எல்லாம் வந்துவிட்டனர்.வந்ததற்கான காரணமே நீங்க வந்து பொண்ணு வீட்டுல தங்கி இருக்கீங்க.நாங்க பையனை பெத்தவங்க நாங்க வந்து அனுபவிக்காம இருப்போமா?என சம்பந்தி சொல்லும் போதே வெளியேற்றப்பட்டுவிட்டேன் நான்.<P>
கடைசியாக நம்பிக்கை இல்லாமல் முதல் பொண்ணை சந்திக்கப்போனேன்.போனவுடனே என் மகள் கேட்டது ”என்னப்பா இது, பிள்ளைகளுக்கு கூட ஒன்னும் வாங்காம கையை வீசிட்டு வர்றீங்க.என் கணவர் என்ன நினைப்பார்.அதும் என் மாமியார் வேற கூடவே இருக்கார்”என்றாள்<P>
முகம் வாடியது கண்டு,” சரிப்பா…இரண்டுநாள் தங்கிட்டு தான் போகனும்” என்றாள்.<P>
”இல்லைமா, நான் குழந்தையையும், மாப்பிள்ளை, உன்னை பார்த்துட்டு போகலாம் என்று தான் வந்தேன்.இன்றே கிளம்பனும் என்று சொல்லி ஒருநேர சாப்பாட்டை முடித்துக்கொண்டு கிளம்பினேன்…<P>
போகும் வழியும் தெரியல….போகும் காலமும் வரல…என நினைத்துக்கொண்டே ரோட்டைக்கடந்த போது தான் அது நிகழ்ந்தது.பஸ் வேகமாக வந்தது நகர்வதற்குள்….எல்லாம் முடிந்துவிட்டது.<P>
என்னைச்சுற்றி சொந்தங்களும்,பந்தங்களும்.<P>
என் மருமகள்கள் என் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்கள்.என் மகள்கள் என் காலைக்கட்டிக்கொண்டு அழுது கொண்டு இருந்தார்கள்.என் மகன்கள் சோகமாக நின்று கொண்டு இருந்தார்கள்.<P>
எல்லோர் கண்களிலும் கண்ணீர்.<P>
என் பேத்தி என் மகனிடம்  “ஏம்பா அழறீங்க”என்றாள்.<P>
”தாத்தா நம்மளை எல்லாம் விட்டுபோய்ட்டாரும்மா…”என்றான் என் மகன்.<P>
”அதான் தாத்தா இரண்டு நாளைக்கு முன்னாடியே நம்மள விட்டுப்போய்ட்டாங்களே..அப்போ அழாம,இப்போ அழறீங்க”என்றாள்.<P>
பெரியவர் பிணம் லேசாக சிரிப்பது போல் பிரமை எல்லோருக்கும்.<P>

Sunday 21 April 2013

திமுக தலைமையின் கவனத்திற்கு.........!


சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரசுடனான கூட்டணியை எதிர்த்து தொண்டர்கள் இருந்தாலும் கட்சி தலைமை முடிவெடுத்துவிட்டதற்காக அந்த நிலையை ஆதரித்தார்கள். கட்சி தலைமை சொல்வதை செய்யும் தொண்டர்கள் பாவப்பட்டவர்கள். அவர்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் தலைமையை- அரசைத்தான், கட்சியில் உண்மையான எதையும் எதிர்பார்க்காத ஒரு உண்மைத்தொண்டன் விரும்புவான்.
ஆனால் நேற்று (தினத்தந்தி சிவந்தி ஆதித்தன் மறைவின்போது) நடந்த எதிர்பாராத சந்திப்பின் மூலம் தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தான் அந்த வணக்கம் அமைந்தது. அந்த வணக்கத்திற்கு அர்த்தம் ஒரு கடைநிலைத்தொண்டன் கூட அறிந்ததே…!
உண்மையில் சொல்லப்போனால்.போன சட்டசபைத்தேர்தலில் தேமுதிக கூட்டணி தங்களை ஆதரித்து இருந்தால் ஒருவேளை ஆட்சியை பிடித்து இருக்கலாம்.நாம் செய்யவில்லை.காங்கிரஸுடனேயே கூட்டணி என்று ஒரு தேவையில்லாத முடிவை எடுக்க எது காரணமாக இருந்தது?.ஏன் இருந்தது?இந்தக் கேள்விக்கான பதிலை உங்களிடமே விடுகிறேன்.
தேமுதிக தலைவர் நல்லவர் தான் .ஆனால் அவர் குடிபோதையில் உளறுவதும்,அடிப்பதும் என சினிமா காட்சி போலவே அரசியலையும் நடத்திப்பார்க்கிறார்.அது நமது கழகத்திற்கு ஒத்துவருமா…?அல்லது அடிவாங்க நம்முடைய அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பது பற்றி தலைமை முடிவு செய்து…. முடிவை எடுக்கவும்.
அடுத்ததாக, இந்த அ.தி.மு.க ஆட்சியில் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற கணக்குடன் பதவி வாங்கியவர்களைப்போலவே,அடுத்த ஆட்சிமாற்றம் வரும் போது (திமுக விலும்) அதேமாதிரி பதவி ஆசையும் பணத்தாசையும் பிடித்தவர்களும் உடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களின் அடையாளங்களை கண்டறிய தலைமையின் சாதுர்யம் ஒன்றே போதுமானது. அதன் மூலம் ஒருத்தரின் அடையாளங்களை கண்டறிந்து கொண்டு உண்மையாகக் கட்சிக்கு உழைப்பவராக இருந்தால் மட்டுட்ம உடன் வைத்துக்கொண்டு மற்ற ஜால்ராக்களை புறம் தள்ள வேண்டும் என்பதும்,இல்லையெனில் கட்சி காசுக்காக அலைகிறது என்ற அவப்பெயர் வந்துவிடும் என்பதும் தலைமை அறிந்ததே….
எனக்குத்தெரிந்து தி.மு.க.வின் இன்றையத் தலைமையைப்போல் எதிர்காலத்தில்,  ஒரு திறமைசாலி வருவார் என்பதை யோசிக்கக்ககூடமுடியவில்லை.அப்படி வரவேண்டும் எனில் இன்னும் பயிற்சி அதிகம் தேவைப்படுகிறது பதவியை ஏற்கத்துணிபவர்களுக்கு.
கட்சியின் எல்லா மட்டங்களிலும் குடும்ப அரசியல் நுழைந்துவிட்டது.அதை தடுக்கும் நிலையில் தலைமை இல்லை.ஆனால் இறுதி முடிவெடுக்கும் நிலை என்பது தலைமையை விட்டு எங்கேயும் சென்று விட வில்லை.உறுதியான இறுதியான முடிவு கண்டிப்பாகத் தேவை தலைமை அடையாளம் காட்டும் கட்சியின் அடுத்த அரசியல் தலைவரை ஏற்பதற்குத் தொண்டர்களும் எங்களைப் போன்ற ஆதரவாளர்களும் தயாராக இருக்கிறோம்.ஆனால் உங்களைப்போல பக்குவம் நிறைந்த அரசியலை அவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். அவரை ஏற்கிறோம் என்பதற்காகவே அவருடைய குடும்பமும் அரசியல் நிகழ்வுகளில் தலையிடுவதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.ஏற்கவும் மாட்டோம்.
புதிய தலைமையை ஏற்பவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் ஜால்ராக்களை ஒதுக்கிவிட்டு, நல்ல ஆலோசகர்களை உருவாக்கிக்கொண்டு, சொந்த முடிவை எடுப்பவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அடுத்த ஆட்சி கழக ஆட்சிதான். அதற்கு எங்களைப்போன்ற எதையும் எதிர்பார்க்காத தொண்டர்களும் ஆதரவாளர்களும் பக்கபலமாக இருப்பார்கள். எனவே, இன்றைய கழகத் தலைமை இனி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கட்சியை காப்பாற்றுவதிலும்,தொண்டர்களின் நம்பிக்கை காப்பாற்றுவதிலுமே  செயல்பாடு அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.
யார் என்ன குறை சொன்னாலும் நாங்கள் எப்போதும் தி.மு.கவையே ஆதரிப்போம். அதற்கே வாக்களிப்போம். அந்த அன்பிலும்,உங்கள் மேல் உள்ள பாசத்திலும் கழகத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கையிலும் எழுதப்பட்ட ஒரு எளியவளின் வேண்டுகோள் கடிதம் இது……
பலரும் சொல்லத் தயங்குவதை நான் சொல்லிவிட்டதாக ஒரு மனநிறைவு. அவ்வளவுதான்.

Friday 19 April 2013

80 களில் காதல்............


மயங்கினேன்.. சொல்லத்தயங்கினேன்…உன்னை விரும்பினேன் உயிரே….’
தீபா ,காலேஜ் முடித்துவரும் போது தினமும் இப்படித்தான் ஏதாவது காதல் பாட்டு போடுவான் மணி.
மணி தீபாவின் வீட்டிற்கு அருகில் கேசட் கடை வைத்திருக்கிறான்.
தன் காதலை சொல்லத்துணிவில்லாமல்,பாடல்வரிகளிலே அவனது காதலை வெளிப்படுத்த நினைப்பது தான் அவன் எண்ணம்.
அந்த எண்ணம் பற்றி தெரிந்து கொள்ள தீபாவிற்கு ஒருவருடம் ஆனது.ஒருநாள் அவன் கடைக்குச் சென்று, “இளையராஜா பாடிய பாடல்களாக எனக்கு பதிந்து தரமுடியுமா?இந்த பேப்பரில் எல்லா பாடல்களும் வரிசைப்படுத்தி எழுது இருக்கிறேன்” என்று பேப்பரை நீட்டினாள்.
மணி அந்த பேப்பரை வாங்கும் போது அவன் கை நடுங்கியதை. கவனித்தாள் தீபா..
“எப்போ வரட்டும்” எனக் கேட்டாள்.
“நாளைக்கே கொடுத்துடுறேன்ங்க….”முகத்தை பார்க்காமலே திரும்பியபடி சொன்னான் மணி.
மறுநாள்,இவள் காலேஜ் முடித்து வந்தபோது,வாசலில் நின்று, “நீங்க பதியச்சொன்ன பாடல்..இந்த கேசட்டில் இருக்கு.இந்தாங்க” என்றான்.
“எவ்வளவு ஆச்சு ..?”
“இல்ல பணம் வேண்டாம்..உங்களுக்கு கிஃப்ட். நீங்க வீட்டில் போய் கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” என உள்ளே ஓடிவிட்டான் மணி.
தீபா அவளது அறைக்குள் சென்று பாடல்களை சரிபார்த்தாள்…ஐந்து பாடல்கள் முடிந்து இருக்கும்.”தீபா.உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”என்றது கேசட்..அதில் மணியின் குரல்.
சிரித்தபடி கேட்ட தீபா…மறுநாள் காலேஜ் போகும் வழியில் மணி கடையை பார்த்தாள் திறக்கவில்லை.
சாயந்தரமும் பூட்டியபடியே இருந்தது கடை.. ஒருவாரம் கழித்து பார்த்தபோது கடை திறந்து இருந்தது.உள்ளே சென்றாள் தீபா.
மணி எழுந்து நின்றான். அப்போது நிமிர்ந்து தீபாவை பார்க்கவில்லை.
“ஏன் கடை ஒருவாரமாக மூடியிருந்தது?” எனக்கேட்டாள் தீபா
“எனக்கு பயமா இருந்தது..”என்றான்
“என்ன பயம்?”
“இல்ல நான் கேசட்டில் பேசியதை உங்க அண்ணனிடம் நீ சொல்லிட்டா,அவர் வந்து என்ன பண்ணுவாரோ என்ற பயத்தில் தான் கடையை மூடி வைத்து இருந்தேன்” என்றான்.
“அப்போ நான் காதலுக்கு ஓகே சொல்லுவனா?இல்லையானு நீ பயப்படலை” என்றாள்.
அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான்..
தீபா சிரித்துக்கொண்டே, “பாட்டெல்லாம் அருமையா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அண்ணனுக்கு பயந்து கடையை பூட்டியவன்……கல்யாணத்திற்கு பயந்து காதலையும் பூட்டினால்…….?
பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன.
தீபா அவசரமாக சமையல் முடித்துவிட்டு,கணவரின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“நியூஸ் பார்த்தது போதும் சுந்தர் ப்ளீஸ் மீயூசிக் சேனல் போடுங்க கொஞ்சம்” என்றாள் தீபா.
“கொஞ்சம் என்ன.. நிறையவே போடுறேன்..” -சேனலை மாற்றினான் சுந்தர்.
“நீங்க விரும்பி கேட்கும் பாடல்..இதோ உங்களுக்காக…”.என்றபடி கொஞ்சி அந்த பெண் மறைந்தாள்….பாடல்கள் தொடங்கியது..
‘மயங்கினேன்…சொல்லத்தயங்கினேன் …..’என்றபடி விஜயகாந்தும்,ராதிகாவும் திரையில் தோன்றினர்.
அலுத்துக்கொண்ட சுந்தர், “உனக்கு இளையராஜா பாட்டுல என்ன தான் இருக்கோ… நீயே பார்த்திக்கிட்டு இரு. நான் போன் பேசிட்டு வர்றேன்” என்று நகர்ந்தான்.
தீபாவினால் இன்றுவரை மறக்கமுடியவில்லை……இளையராஜா இசையையும்,அந்த இசையை மனதில் பதிய வைத்த மணியையும்.…

Wednesday 17 April 2013

காமசூத்ரா.......


இரவு 11 மணிக்கு தொலைக்காட்சியின் அந்தரங்க நிகழ்ச்சியில்.,
கணவன் மனைவியிடையே தோன்றும் காதலுக்கும்,காமத்துக்கும் ஒரு கட்டுப்பாடு வரக்கூடாது,அப்படி வந்தால்…ஒருத்தருக்கு ஒருத்தர் மேல் இருக்கும் அன்பும் கட்டுப்பாடாக அமைந்துவிடும். நம் இல்லறம் சிறக்கவேண்டுமெனில்..கணவன் மனைவியிடையே அந்தரங்க இன்பம்….சுகமானதாக அமைய வேண்டும்.
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்த சுவேதா காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், தொலைக்காட்சியை ஆப் செய்தாள்.வேகமாகச் சென்று கதவின் சிறுதுளை வழியாகப் பார்த்தவள் அது தன் கணவன் என்று தெரிந்ததும்,கதவைத்திறந்தாள்.
ஏங்க இவ்வளவு லேட்..என்ற சுவேதாவை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் சேகர்.
நான் கேட்டுட்டே இருக்கேன்ல.ஏங்க இவ்வளவு லேட் என்றாள் மறுபடியும்.
ஆபிஸில் கொஞ்சம் ஆடிட்டிங் வொர்க் முடிக்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இப்போ என்ன ஆச்சு.வந்ததும் கேள்விக்கணைகளை அடுக்கனுமா..?என்று கோபமாகக் கேட்ட கணவனை முறைத்தபடி தோசை ரெடி பண்ண கிச்சனுக்குள் நுழைந்தாள் சுவேதா.
பாத்ரூம் சென்று புத்துணர்வுடன் வந்தான் சேகர்.
இன்னைக்கு என்ன டிபன் சுவேதா என்றான்.
ம்ம்ம்,வெங்காய சாம்பாரும்,தோசையும் என்று சொன்னபடி தோசையை அடுக்க ஆரம்பித்தாள் அவன் தட்டில்.
ஏய் சுவே.. போதும் அடுக்காத…மூனு மட்டும் ஊத்திட்டு வா நீயும் நானும் சேர்ந்தே சாப்பிடுவோம் என்றான் சேகர்.
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
மணி 12 த்தாண்டியது,படுக்கையை நெருங்கிய சேகர்…அப்பாடா இன்னைக்கு ரொம்ப அலுப்பா இருக்கு,நான் தூங்குறேன் சுவே..குட்நைட் என்றபடி படுத்து 5ந்தே நிமிடத்தில் குறட்டை விட ஆரம்பித்தான்.
இப்படித்தான் ஒருவார காலமாக அலுத்துப்போய் படுத்துவிடுகிறான்.திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.அதற்குள் அலுத்துவிட்டதா நம்மை என்று சற்று கோபத்துடன் படுத்தவளுக்கு தூக்கம் என்பது இம்மி அளவுகூட வரவில்லை.எழுந்து சென்று தொலைக்காட்சியை மறுபடியும் ஆன் செய்தாள்.
காமசூத்ரா என்பது நமது உடலின் தேவையும்,உள்ளத்தின் தேவையும் வெளிக்கொண்டு வர உதவி செய்கிறது.இந்தக் கலை பொதுவாக ஆண்களிடம் நிறைந்து காணப்படும்.ஆனால் பெண்களுக்குத்தான் செக்ஸில் ஆர்வம் இருக்காது,அதனால் இதுபோன்ற புத்தகங்களை,அல்லது செயல்முறை ஆவணத்தை வாங்கிப்பார்ப்பதன் மூலம் பெண்களின் உணர்வுகள் தூண்டப்படும்…எனவே…..என்றதும் பட் என அணைத்தாள் தொலைக்காட்சியை…….
பெண்களுக்கு ஆர்வம் குறைவாம்…,ஆண்களுக்கு அதிகமாம்……முணுமுணுத்தப்படி ஹெலன்கெல்லரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்….சுவேதா….
உள்ளிருந்து சேகரின் குறட்டை சத்தம் இன்னும் சற்று கூடியது……..

Tuesday 16 April 2013


பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் இடர்பாடுகள்:

பெண்களுக்கு மேலோட்டமாக அல்லது தானாக ஏற்படுத்திக்கொள்ளும் இடர்பாடுகள் குறித்து பார்த்தோம்.இம்மாதிரி இடர்பாடுகள் தானாக தோற்றுவித்துக்கொள்வது.ஆனால் இயல்பாகவே பெண்களுக்கு என்ன வழிகளில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன என்பது பற்றி இனி பார்ப்போம்.
மாதவிடாய்,கர்ப்பகாலம்,மெனோபஸ் டைம், இந்த மூன்றும் பெண்களுக்கு ஏற்படும் சந்தோஷமான விசயம் தான் எனினும்.இந்த மூன்று கட்டங்களையும் கடப்பதற்குள் பெண்கள் மிகவும் நலிவுற்று போவார்கள்.எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும்,மனரீதியிலும்,உடல் ரீதியிலும் இம்மூன்று விசயங்களில் தோற்றுப்போவார்கள்.முதலாவதாக மாதவிடாய் பிரச்னை பற்றி பார்ப்போம்.
மாதவிடாய்:
பெண்கள் வயதுக்கு வருதல் அதாவது,மாதவிடாய் ஆரம்பிக்கும் காலகட்டம் பொதுவாக பெண்களுக்கு 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் ஏற்படக்கூடியது.பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கோடிக்கணக்கான சினைமுட்டைகளை வாங்கிக்கொண்டு தான் பிறக்கிறார்கள்.
அதாவது ஒருபெண் தான் பிறக்கும் போதே இன்னொரு உயிரையும் படைக்கும் அளவுக்கு ஒரு சக்தியுடன் பிறக்கிறாள்.இது ஒரு வரம் தான்.ஆனால் சாபம் என்னவெனில் அவள் பூப்பெய்தும் காலம் வரை அந்த சினைமுட்டைகளின் அளவு குறைந்து கொண்டே செல்லும்.கோடிக்கணக்கில் இருக்கும் சினைமுட்டை ஒரு பெண் தன் பருவவயதை அடைவதற்குள் ஒரு லட்சம் சினைமுட்டைகள் மட்டுமே ஓவரி என்று சொல்லப்படும் கருத்தரிப்பு குழாயினில் ஒளிந்து கொண்டு இருக்கும்.
பூப்பெய்தும் காலம் வந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பெண்ணுக்குரிய அழகை எடுத்து காண்பிக்கிறது.ஆனால் ஒரு பெண் வயதுக்கு வந்ததிலிருந்து மெனோபாஸ் டைம் வரை வரும் மாதமாதம் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்.இதனால் சில பெண்களுக்கு அதிக டென்ஷன்,மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புக்கூட ஏற்பட வாய்ப்புள்ளது.மாதம் தோறும் சில பெண்களுக்கு சுழற்சி முறையில் இரத்தப்போக்கு உண்டாகும்.சில பெண்களுக்கு 35 நாட்களுக்கு மேலும் 45 நாட்களுக்குள்ளும்,சில பெண்களுக்கு 4 மாதங்கள் கூட இரத்தப்போக்கு தடைபட்டு வரும்.
மாதவிடாய் வரும் போது அநேகப்பெண்கள் வயிற்று வலி காரணமாக துடித்துப்போய்விடுவார்கள்.ஒருசில பெண்களுக்குத்தான் எந்த வித அறிகுறியும் இல்லாமல் பீரியட்ஸ் வந்து போகும்.அப்படிப்பட்ட பெண்கள் மிகவும் சந்தோஷமானவர்கள்.ஏனெனில் மாதந்தோறும் தோன்றும் மூன்று நாள் வயிற்றுவலி என் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு சிலருக்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துப்போய்விடுவார்கள்.
இந்த இரத்தபோக்கு காரணமாக சில பெண்கள் அந்த மூன்று நாட்களில் மன உளைச்சலில் எந்தவித வேலைகளையும் செய்யமுடியாமல் அல்லல் படுகிறார்கள்.ஏன் அவர்களால் வீட்டு வேலைகள் கூட ஒழுங்காக செய்யமுடியாமல் படுத்தே கிடப்பார்கள்.அப்படிப்பட்டவர்கள் மிகவும் வீக்காக இருக்கிறார்கள்,அல்லது அனுமிக்காக(இரத்த சோகை) இருக்கிறார்கள் என்று பொதுவாகச்சொல்வார்கள்.மாதவிடாய் வருவதால் உடலில் உள்ள கழிவுகள். இறந்த சினைமுட்டைகள் வெளியேற்றப்படுகிறது.மாதவிடாய் வந்துமுடிந்ததும்.பெண்கள் சற்று சுதந்திரமாக உணர்வார்கள். தொடரும்.

Saturday 13 April 2013


மலாலா ஒரு அறிவுச்சித்திரம்:

ஒருசிலருக்குத்தான் சின்ன வயதில் தான் வளரும் போதே தன்னுடன் போராட்ட குணத்தையும் சேர்த்தே வளர்த்துக்கொள்ள முயல்வர்.அப்படிப்பட்டவள் தான் மலாலா என்ற சிறுமி.பெண்கள் கல்விக்காக போராடத்தொடங்கிய மலாலா ஸ்கூல் படிக்கும் மாணவி.பாகிஸ்தானில் தாலிபான் அமைப்புகள் சில பெண்கல்வியை தடுத்தனர்.
இதனை எதிர்த்து போராடிய மலாலா.2009 ம் ஆண்டு அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி வாழ்க்கை முறை மற்றும் தலிபான்களின் அடக்குமுறை பற்றி உருது மொழியில் பி பி சி இணையதளத்தில்,கட்டுரையாக எழுதினாள்.அதுவும் புனைப்பெயரில் அவள் எழுதிய கட்டுரை பிரபலமடைந்தைத் தொடர்ந்து தங்களைப்பற்றி உலகம் அறியச்செய்துவிட்டாள் என்ற கோபத்தில் சிறுமியை அடையாளம் கண்டுகொண்ட தாலிபான் அமைப்பு அவளை தலையில் சுட்டது.
2012 ஆண்டு மலாலா சுடப்பட்ட செய்தி அவள் வீட்டை மட்டுமல்ல உலகையே உலுக்கியது.தான் படிக்க வேண்டும் என்ற ஆசையில் பெண் குழந்தைகளின் படிப்பைத்தடுக்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது என்று கேட்டதற்காக சிறுமி என்றும் பாராமல் அவளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல நினைத்ததை உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்க ஆரம்பித்தன.படுகாயமடைந்த மலாலாவை பிரிட்டன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்தனர். எல்லோரும் அவள் மேல் வைத்த நன் நம்பிக்கையின் பெயரால் அவள் பூரண குணமடைந்தாள்.
ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இரண்டு ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டது.இரண்டே நாட்களில் தொலைகாட்சியின் வழியாக பேசமுடியாமல் தான் சுகமாக இருப்பதாக அறிவித்த பின்னரே மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இங்கிலாந்து பிரிட்டன் மருத்துவமனையில் அவளை நல்முறையில் கவனித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி கையாட்டி விட்டு திரும்பி மலாலா, பின்னர் பிரிட்டனில் உள்ள பள்ளியிலேயே சேர்ந்து படிக்கவும் வைக்கப்பட்டாள்.அவள் போராடி,உயிர் போகும் தருவாயில் மீண்டு வந்த கதையை புத்தகமாக எழுத முன்வந்து இருக்கிறாள்.அவளை அதற்கான முயற்சியில் தயார்படுத்த “வீடன்பெல்ட் அண்ட் நிக்கல்டன்” என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.இதற்காக அவளுக்காக ஊதியமாக 16 கோடி ரூபாயை கொடுத்து ”நான் மலாலா” அதாவது மலாலாவின் வாழ்க்கை குறிப்பு அடங்கிய புத்தகத்தை எழுத இருக்கிறாள் என்று அறிவித்துள்ளது.நல்ல விசயம்..இப்புத்தகம் பிரிட்டனின் மற்றொரு பதிப்பகமான லிட்டில் புரவுன் மூலம் உலகமெங்கும் வெளியிடப்படுமாம்..
ஆனால் தாலிபான் அமைப்புகளின் சில அமைப்புகள் நாங்கள் ஏன் பெண் கல்வியை எதிர்த்தோம் என்பதற்கு உதாரணம் பல கொடுத்துள்ளனர்.அதாவது அமெரிக்காவின் கையாளாக செயல்பட்டு வரும் சீர்கேடுகளை உருவாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை . மூடுமாறு நாங்கள் உத்தரவிட்டோம்.ஏராளமான  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
 உடனே தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா நிறுவனம் தங்கள் தொலைக்காட்சிகள் வழியாக மக்களுக்கு தவறான,அவதூறுகளை பரப்பிவிட்டனர்.தாலிபான்கள் பெண்கல்விக்கு எதிராக தாலிபான் செயல்படுகின்றனர் என்று மக்களை தூண்டி விட ஆரம்பித்தனர். சகார கல்விமுறை இஸ்லாமிய நாடுகளில் பெரும் சதித்திட்டத்துடன் திணிக்கப்பட்டதால் படித்த திருடர்களையும்.விபசாரத்தையும் குடும்ப ஆண் பெண் உறவுகளையும் சீரழிவுகளையும் உண்டாக்கியதால் தான் நாங்கள் அந்தக்கல்விமுறையை எதிர்த்தோம்.
பெண் சீரழிவுகளை கண்முன் கண்டததால் தான் தலிபான்கள் சிலர் இந்த முடிவை எதிர்த்தனர்.இதனால் அமெரிக்கா எங்கள் நாட்டில் புகுந்து எங்களை குரல்வளையை நெரிப்பது,போன்று உணர்ந்தோம்.அதன் தாக்கம் தான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்தது.உண்மை உணர்ந்த சிலர் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.அந்நிய கல்விமுறைக்கு எதிராக செயல்பட்டனர். அக்டோபர் மாதம் 2001 ல் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ள மாகாணத்தில் குடிபுக ஆரம்பித்தனர்.
நாங்கள் பழங்குடி இனத்தவர் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து செயல்பட மாட்டோம்.அதனால் தான் துப்பாக்கியை கையிலெடுத்தோம்.அமெரிக்கா அதிர்ந்தது.உடனே பாகிஸ்தானை தன் கைக்குள் வைத்துக்கொண்டு எங்களுக்கெதிராக இராணுவத்தை தூண்டி வேடிக்கை பார்த்தது.இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் இறந்து உள்ளனர்.ஆனாலும் அந்நிய கல்வி நிறுவனத்தை அமெரிக்க ,பிரிட்டன் உதவியுடன் பல கல்வி நிறுவனங்களை செயல்படுத்தி வந்தனர்.
மலாலாவின் தந்தை இவரும் எங்களைப்போன்ற போராளி குணமுடையவர் தான். இருந்தும் அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்பட ஆரம்பித்து விட்டார்.நாசக்கார கல்வி நிறுவனத்தை மலாலாவும் அவளது தந்தையும் ஆதரித்து பி பிசி போன்ற அமெரிக்காவின் கையகட்டு நகலில் எழுத ஆரம்பித்தனர்..பேச்சாற்றல் மிகுந்த மலாலை பயன்படுத்தி தாலிபான்களுக்கு எதிராக நடக்கும் படி உத்தரவிட்டது அமெரிக்கா கூலிப்படை.
அன்று அடையாளம் தெரியாத கூலிப்படைகளால் மலாலா சுடப்பட்டாள்.பின்னர் தாலிபான் அமைப்பு அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது.மீட்டு வந்த மலாலா இது பற்றி எல்லாம் உண்மைத்தகவலை தெரிவிப்பாள் என்ற நம்பிக்கையோடு,அவளது கல்விக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது பிரிட்டன்.
ஆப்கான் அதிபர் அக்டோபர் 9 மலாலா தினம் என்று அறிவித்துள்ளார்.பெண் போராளி என்ற பட்டங்களும்,பதக்கங்களும் பரிசுகளும் வந்து மலாலாவை நோக்கி குவிகின்றன.இவையெல்லாம் அமெரிக்கா ஆப்கான் பாகிஸ்தான் போன்ற நாடுகளை குறிவைத்து தாக்கும் செயல் என்றே தாலிபான்கள் அறிவிக்கிறார்கள்.
எப்படியோ…கல்விக்காக ஒரு இளம்பெண் போராடுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.அமெரிக்காவின் தலையீடு இருந்தாலும் தாலிபான்கள் அடக்குமுறையை கையாள்வதும்,அடங்கவில்லையெனில் துப்பாக்கியை கையிலெடுப்பதும் என்ன வகையான செயல்?அதுக்கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அமெரிக்கா சாதுர்யமாக நுழைந்து தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள நினைக்கும் போது இவர்கள் கையில் துப்பாக்கியை எடுத்து போராட்டம் பண்ணுவது நியாயமற்றது.அதுவும் நாசவேலைகளை எல்லாம் தெரிந்துகொள்ளும் வயது அப்பெண்ணிடம் இல்லை.அவளுக்குத்தேவை படிப்பு ஒன்றுதான் அதற்காக ஒரு பெண் பிள்ளையை சுட்டு கொன்று தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள நினைப்பது காட்டுமிராண்டி செயல்தான்.இதை எந்த தாலிபான் அமைப்புகள் செய்து இருந்தாலும் சரி கண்டனத்துக்குட்பட்டவர்கள்.
அக்குழந்தை படிக்கட்டும்,அதை இப்போதே பெரியாளாக்கி அவளது படிப்பில் மண்ணை அள்ளிப்போட வேண்டாம் மலாலா மீண்டு வந்தவள் சாதிக்கப்பிறந்தவள் கண்டிப்பாக அவளை பணத்தாசை காட்டி படிப்பை முற்றுப்பெற வைத்துவிட வேண்டாம்..என்ற வேண்டுதலோடும் மலாலாவின் தலையில் பட்ட குண்டடி அவளை மேலும் இரும்புப்பெண்மணியாக வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு…மலாலாவின் நாளைய எதிர்காலத்தை வரவேற்க நாடே தயாராகி இருக்கிறது…….

Thursday 11 April 2013

படிங்க.. சிரிங்க....ஆனா கேலி பண்ணாதீங்க...கடவுள் குத்தம் ஆய்டும்.......ம்கூம்....


ரொம்ப கோபமாக இருந்த என் மனசாட்சியை..சற்று ஆசுவாசப்படுத்த முயன்றேன் எனவே ஒரு நகைச்சுவையான விசயத்தை பகிரலாம் என்று நினைத்து அவ் விசயத்திற்கான கருவை தேடிக்கொண்டு இருக்கும் போது,அருகே டீ கடை வந்தது.இருவரும் டி,இரண்டு என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு உட்கார்ந்தோம்.நான் மட்டும் பேப்பர் படிக்கத்தொடங்கினேன் என் மனசாட்சியை திரும்பிப்பார்த்தேன் இன்னும் சற்று கோபமாகவே அமர்ந்து இருந்தது.
பேப்பர் படித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு அதிர்ச்சி..என்னவென்றால்.ஷீரடியில்,பக்தர்கள் வசதிக்காக ரூ 110 கோடியில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.அதை கட்டிக்கொடுத்தவர் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர்.அவர் ஷிரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்.பக்தி பரவசத்தால் இந்த கட்டிடத்தை கட்டி ஷிரடி சாய்பாபா டிரெஸ்டுக்கு வழங்கினார்.
ஷிரடி சாய்பாபா ரோடு,காடு,மேடு,பள்ளம் எனப்பார்க்காது பயணம் செய்து பக்தர்களின் கதையை,கஷ்டங்களை கேட்டு அதை நிவர்த்தி செய்ததாகத்தான் அவரது வரலாற்று நாடகங்கள் மூலமாக நாம் அறியப்பட்டது.ஆனால் அவரது பெயரில் டிரஸ்ட் நடத்தி ஆயிரம் கோடி ரூபாயில் சம்பாதித்து,அதிலும் இன்று அதிகபட்சமாக ஓய்வு அறைகள் கட்டிக்கொடுக்கும் அளவிற்கு ஷிரடி சாய்பாபா இறந்து வளர்ந்துள்ளார் என்பது பெருமைக்குரியது (?).
ஆனாலும்,அந்த பெருமைக்குரிய விசயத்தில்.பக்தர்கள் தங்கும் அறையின் கட்டணம் தான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.அறைகள் அனைத்தும் டிரஸ்டுக்கு ஓசியாகக் கிடைத்தது.முதலில் இவ்வளவு காசு உள்ள பார்ட்டியை(கட்டிடம் கட்டிக்கொடுத்தவர்) கண்டுபிடித்து ,இன்கம்டாக்ஸ் ரெய்டு,சிபிஐ ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்ட அவருக்கு நேர்மையான முறையில் பணம் கிடைத்து இருக்கப்போவது இல்லை.அப்படி சம்பாதித்து இருப்பதை இப்படி டிரஸ்டுக்கு கட்டிக்கொடுப்பதில் கண்டிப்பாக அவருக்கு மனசு வராது.
ஒன்று அந்த நபர் வட்டிப்பணத்திலோ,அல்லது வேறு ஏதோ தொழிலில் போட்டி ஏற்பட்டு அது வேண்டுதல் மூலம் சரியாகி,அதற்கு காணிக்கையாக கட்டடத்தை கட்டிக்கொடுத்து இருக்கலாம்..என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.
இன்னொரு விசயம்.அந்த நபர் தான் ஓசியில் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துட்டார்ல…அதை மக்களுக்கு இலவச தங்கும் விடுதியாக ஆக்கிக்கொடுக்கலாமே ஷிரடி சாய் பாபா டிரஸ்ட்.அதற்கும் ஒரு கட்டணம்,அதாவது ஏசி அறைக்கு 900 ரூபாயும்,சாதாரண அறைக்கு 500 ரூபாயும் ஒரு நாள் தங்குவதற்கு கட்டணமாக வசூலிக்கத்திட்டமிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.இதையெல்லாம் ஏன் ஷிரடி சாய்பாபா கண்டு கொள்ளாமல் (ஒரு காலை மடக்கி) உட்கார்ந்து கொண்டே இருக்கிறார் என்பது தான் புரியவில்லை.நமக்கு விசித்திரமாக இருக்கிறது.
இதைப்படித்து என் மனசாட்சியிடம் சொன்னபோது லேசாக புன்னகைக்க ஆரம்பித்தது.ஆனால் அடுத்த நீயூஸை படிக்கும் போது வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தது..மனசாட்சி மட்டுமல்ல நானும் தான்..
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக,கோவையில் அகில இந்திய தமிழ் மதம்,கலை மற்றும் இலக்கிய சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது கண்டு அதிர்ச்சியும் வேதனையும் கலந்த சிரிப்பு தான் தோன்றியது.அதிலும் முன் வரிசையில் எல்லா சாமிகளுக்கும்,சாமி சிலைகளுக்கும் சேர் போட்டு அமர வைத்து இருந்தார்கள்.சாமி சிலைகளும் உண்ணாவிரதம் மேற்க்கொண்டது.
எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது.அட முட்டாள் பயலுங்களே……முட்டாள் பக்தைகளே….எல்லாம் காத்து ரட்சிக்கும் இந்த சாமி சிலைகள் ராஜ்பக்‌ஷே திருப்பதி வரும் போதே அவனை கொன்று இருக்கலாமே..அசுரர்களை அழிக்கும் சாமி சும்மா இருந்தது ஏன்? உண்டியலில் அதிக பணம் போட்டான் என்பதற்காகவா..?அல்லது போர் நடக்கும் போது இந்த சாமிகள் எல்லாம் சென்று சூரசம்காரம் செய்து அந்த கொடியவர்களை அழித்து இருந்து இருக்கலாமே.எதுவும் செய்யாமல் இன்று உண்ணாவிரதம் இருந்து தானும் சகமனிதனைப்போல் அரசாங்கத்தால் கைது செய்து செய்யப்படலாம் என்றுகூடத் தெரியாமல் அமர்ந்து இருந்த அந்த சாமிசிலைகளை என்னவென்று சொல்லுவது.
கைது நடவடிக்கையின் போது சாமி சிலைகள் எஸ்கேப் ஆகிவிடுமா…?இல்லை சிலை இருந்தால் கைது செய்யமாட்டார்கள் என்ற மதவாதிகள் திட்டம் போட்டு நல்லபெயர் எடுக்கலாம் என்ற யோசனையில் சிலைகளையும் வெயிலில் உட்கார வைத்து இருக்கிறார்களா..? சாமி குத்தம் ஆகும்படி செய்த இந்த மதவாதிகளை கடவுள் மன்னிப்பாரா…?அல்லது ஷிரடி சாய்பாபா போல்..காசு சம்பாதிக்க நினைக்க ஆசைப்பட்டு பேமஸ் ஆகலாம் என்று சிலைகள் அனைத்தும் வீதிக்கு வந்தனவா தெரியவில்லை….
யாம் அறியேன் பராபரமே…… மனசாட்சியோடு… நானும்..மனதை ஒளித்து வைத்துவிட்டு நடையைக்கட்டினேன்…

மனதை உலுக்கும் கேள்விகள்


எனக்கும் என் மனசாட்சிக்கும் இடைய பயங்கர சத்தம் எழுந்தது.எல்லாம் கூடங்குள அணு உலை சம்பந்தமாகத்தான் என் மனசாட்சி சொன்னது.இப்போது மத்திய அரசு இந்த திட்டத்தினை கைவிடுவது தான் நல்லது.இல்லையெனில் மக்கள் போராட்டம் இடிந்தகரையில் பயங்கரமாக வெடிக்க ஆரம்பிக்கும் என்றது.
அதெல்லாம் சும்மா,நீ வேற மாணவர்கள் போராட்டம் எப்படி கை விடப்பட்டதோ அதேமாதிரி ஒருநாள் இடிந்தகரை மக்கள் போராட்டமும் கைவிடப்பட்டு விடும்.என்றேன் நான்.
சொன்னது தான் தாமதம் என் மனசாட்சி என்னை கோபமாக நோக்கியது.நீ அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகிறாயா..?அணு உலையால் மக்களுக்கு எவ்வளவு ஆபத்துகள் ஏற்படும் என்பது உனக்குத்தெரியாதா..?சிறு குழந்தைகள் முதற்கொண்டு அனைத்து மக்களும் போராட்டம்,உண்ணாவிரதம் என்று மேற்கொள்கின்றனர்.அந்த போராட்டத்திற்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்றமனசாட்சியை நான் தடுத்தேன்.
இப்போது இவ்வளவு போராடும் மக்கள் அன்றே போராடி இருந்தால் அணு உலை ஆரம்பிக்கும் முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும் அல்லவா..?எல்லாம் முடிந்து செயல்படுத்த ஆரம்பிக்கும் வேலையில் பண்ணக்கூடாது என்றால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு ஏற்படும் தெரியுமா என்றேன்.
இப்போது தான் மக்களுக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது.அதுவும் சிங்கப்பூரில் அணு உலை ஏற்படுத்தின பாதிப்பை மக்கள் அறிகிறார்கள்.அதோடு இன்று நிரைய படித்தவர்கள் அது பற்றி பேசத்தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு போராட்டத்தை வழிநடத்த ஆட்கள் கிடைத்து இருக்கிறார்க.அதன் வீரியம் இப்போது தான் இடிந்தகரை மக்களை சென்றடைந்து இருக்கிறது.அதனால் தன் தலைமுறையோடு அல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து வீதியில்,க்டலில் இறங்கி போராடி வருகிறார்கள் மக்கள்.
அதோடு,அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் என்று சொல்கிறாயே.., அரசாங்கம் எத்தனையோ விண்வெளி ஆராய்ச்சி,ஏவுகணை ஆராய்ச்சி என்று செலவிடுது அதுவும் சில நேரங்களில் பயனில்லாமல் போகிறது அதுபோல் இதையும் நினைத்துக்கொண்டு அணு உலையை மூடிவிடலாமே என்றது என் மனசாட்சி சிறுபிள்ளை போல்..
அதற்கு எத்தனை ஆண்டுகளாக செலவுசெய்து,எத்தனை இஞ்சினியர்களை பயன்படுத்தி இந்த அணு உலையை ஏற்பாடு பண்ணியிருப்பார்கள் என்று கூடத்தெரியாமல் நீ பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.என்றதும்.
நான் வேடிக்கையாகப்பேசவில்லை.மத்திய அரசு தான் மக்களை வேடிக்கைப்பொருளாக நினைத்துவிட்டது.அவர்களது போராட்டங்களை நாடகமாக்கிவிட்டது.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஷிப்ட் முறையில் வேலைபார்க்கும் ஐந்து பேரில் ஒருவருக்கு கேன்சர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.வேலை நேரம் குறைவானதாக இருக்கும்.மற்றும் இஞ்சினியர்கள் பாதுக்காப்போடு பணிபுரிவர். அவர்களுக்கே அந்த பாதிப்பு ஏற்படுமெனில்,சாதாரண மக்கள் அக்கு கெமிக்கல் கலக்கும் கடல் நீரை பயன்படுத்தும் போதும்.அணு கசிவால் ஏற்படும் நச்சுத்தன்மை பாதிப்பால் எவ்வளவு பேர் இறப்பார்கள்,பாதிப்படைவார்கள் என்பது கூடவா தெரியாமல் இருக்கும்.நான் பேசுவது வேடிக்கையா? என்றது கோபக்கனலை என் மேல் வீசியது..
நீ நியாயமாகப் பேசினாலும் எதார்த்தம் என்று ஒன்று உள்ளது.நீயும் நானும் பேசிக்கோண்டு இருப்பது வீண்..இடிந்தகரையில் அணு உலை ஆரம்பிக்கத்தான் போகிறார்கள்.அதில் அரசாங்கம் தன்னுடைய செயல்பாட்டில் மாற்றம் கொள்ளாது.
போராடுபவர்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள்..அரசியல் பண்ணுபவர்கள் பண்ணிக்கொண்டே இருப்பார்கள்..இதை வைத்து சம்பாதித்துக்கொண்டு இருப்பவர்கள் சம்பாதித்துக்கொண்டே இருப்பார்கள்..
ஆனால் இடிந்த கரை மக்களின் மனது இடிந்து தான் போய் இருக்குமே தவிர அணு உலை இடியாது…என்று கூறிவிட்டு மனசாட்சியின் கோபத்தை அடக்கிவிட்டு…நானும் மனசாட்சியும் வேறு இடம் நோக்கி நடக்கத்தொடங்கினோம்……..

Saturday 6 April 2013

பார்ன் டூ வின்

பார்ன் டூ வின் என்ற அமைப்பை சுவேதா என்ற நங்கை(திரு) ஆரம்பித்துள்ளார்.அந்த அமைப்பின் அங்கத்தினராக எனக்கும் ஒரு பொறுப்பை கொடுத்துள்ளார்.வரும் 29 ந் தேதி திருநங்கைகள் தினத்தன்று, மாலை 5 மணிக்கு அமைப்பின் சார்பாக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநங்கைகளை அரவணைத்துக்கொள்ளும் அன்னையர்களுக்கு விருதும்,திருநங்கையாக இருந்து ஜெயித்து வாழுபவர்களுக்கு விருதும் கொடுத்து கவுரவிக்கும் விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன..இந்த விழாவுக்கான செலவுகளை சமாளிக்க உங்களைப்போன்ற நல் உள்ளங்கள் முடிந்த அளவு டிக்கெட்(100,200,500) வாங்கி உதவினால் அந்த அமைப்பு சிறம்பெற்று வாழும்..அந்த அமைப்பின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான் விழிப்புணர்வு..சமூக சேவை மட்டுமே...எனவே தயவு செய்து அதற்கு மக்கள் ஆதரவு அளிக்கவும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்...இந்த அமைப்பை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்த  உள்ள சுவேதா என்ற நங்கை(திரு) ஐ ஏ எஸ் க்கான படிப்பதற்கான இந்த அமைப்பில் நானும் ஒரு அங்கத்தினர் என்பதில் பெருமை அடைகிறேன்.முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்..என்பது சிறப்பு செய்தி......

Friday 5 April 2013

பெண்ணே நீயும் பெண்ணா....?


பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பார்க்கும் போது மிக கஷ்ட மனநிலை ஏற்படுகிறது.பெண்கள் ஒரு கேலிப்பொருளாகவும்,கேலிச்சித்திரமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என யோசிச்சுப்பார்க்கும் போது பெண்களில் அநேகம் பேர் ஆண்களைப்போல துணிவு அற்றவர்களாகவே வாழ்வதும்.அவர்களது வாழ்க்கையைத்தான் இடர்பாடுகளாகவும் தங்களுக்குத்தாங்களே நினைத்து ஒரு கூட்டிற்குள் சுருங்கி விடுகின்றனர் பெண்கள்.
அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பதை நான்கு வகைகளாகப்பிரித்து பார்க்க வேண்டும்.அதாவது,விரக்தியுணர்வு,கவலை,பதற்றம்,மன அழுத்தம்.இந்த நான்கு வகையானவற்றில் தான் பெண்கள் தங்களை முன்னேற்றப்பாதையிலிருந்தும்,குறிக்கோள்களிலிருந்தும் சற்றே பின்னோக்கி இழுத்துச்சென்று விடுகின்றன.
முதலாவதாக விரக்தியுணர்வு:
ஒரு குறிக்கோளை நினைத்தப்படி செய்து முடிப்பதற்குள்,சற்றேனும் தடங்கள் ஏற்படின் உடனே விரக்தியுணர்வு ஏற்பட்டு விடுகிறது..தொய்வு ஏற்பட்டு விடுகிறது.அதை அப்படியே விட்ட இடத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்குவது போல் தொங்க விட்டுவிடுகின்றனர்.அந்தபோக்கை மாற்ற வேண்டும்…இது முதல் படி.
இரண்டாவது கவலை:
எதெற்கெடுத்தாலும் கவலை..எனக்கு மட்டும் ஏன்,எல்லாரும் நல்லாத்தானே இருக்கிறார்கள்.நான் மட்டும் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் இது போன்ற கேள்விகள் பெண்களை இன்னும் கவலை என்ற அதலபாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும்…இதெல்லாம் ஒரு விசயமா..?இதையும் தாண்டி நாம் சாதிக்க வேண்டியது அநேகம்  இருக்கு…என்ற போக்கு கொள்ள நினைத்தால் பாதி கவலை தீர்ந்தமாதிரி ஆகிவிடும்..இது தான் இரண்டாம் படி..
மூன்றாவது பதற்றம்:
அய்யயோ இப்படியா..?அய்யோ…அம்மா…என அலறி அடிக்காமல் நிதானமாக,அதே நேரத்தில் எடுத்த காரியத்தில் வேகத்துடன் செய்ய ஆரம்பிக்க வேண்டும்…பதட்டம் நம் உடலை மட்டுமல்ல மனதையும் தொய்வாக்கி விடும்..எனர்ஜி லெவலை இறக்கிவிடும்,இதையும் கொஞ்சம் தாண்ட வேண்டும்..
நான்காவது மன அழுத்தம்:
இது தான் இருப்பதிலேயே கொடுரமானது.நான் மட்டும் அல்ல அடுத்தவர் மனதையும் சேர்த்து அழுத்ததொடங்கிவிடுவோம்.இந்த அழுத்தம் நம்முடைய ஹார்ட்டை பாதித்து விடும்.அந்த அளவிற்கு மோசமான ஒரு கொள்கை மன அழுத்தம் அடைவது…இதை கண்டிப்பாகத்தூற எரிந்தே ஆக வேண்டும்…
இந்த நான்கு படிகளையும் கடக்க வேண்டும்.கோவில்களில் நூற்றி எட்டு படி நடந்து சாமியை தரிசித்து விமோசனம் பெற்றேன் என்பதை விட…இந்த நான்கு படிகளையும் கடந்து நற்புத்தி பெற்றேன் என்று சொல்வதே ஒரு பெண்ணுக்கு அழகு.இந்த நான்கு நிலைகளையும் நானும் கடந்து வந்து தான் இதை எழுதுகிறேன்…இன்னும் அடுத்தடுத்து இது பற்றிய முழு வாழ்க்கை வரிகளோடு பகிர்கிறேன்….