கிருஷ்ணலீலைகள்…கேள்விப்பட்டு இருக்கேன்…ஆனால் நீ பண்ணினதோ
காமலீலைகள் ஆக அல்லவா இருக்கின்றன.எத்துணை அநியாயங்கள் படைத்திருக்கிறாய்…?
உன்னை கடவுளாக சித்தரித்துக்கொண்டாடும் மக்களை நினைத்து சிரிப்பதா..அழுவதா
என்று கூடத்தோணவில்லை.கிருஷ்ண ஜெயந்தி என்ற உன்ற பிறந்தநாளை விழாக்கோலமாக அல்லவா கொண்டாடி
மகிழ்கின்றனர் என் குலமகள்கள்.
அவர்களுக்குத்தெரியுமா…?அடுத்தவன் மனைவியைக்கூட நீ விட்டு
வைத்தது இல்லை என்பது.அவர்களுக்கு நான் சென்று என்னவென்று புரியவைப்பேன்.
என்னை பகுத்தறிவு முட்டாள் என்று கூறிவிட்டு,அவர்கள் ”அ’நாகரீக
கோமாளிகள் ஆகிவிடுகின்றனர்.அவர்களைக் கண்டால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
புதிது புதிதாக விரதங்கள்,அதும் பார்ப்பன சமுதாய விரதங்களை
கடைப்பிடித்தால் நாமும் பார்ப்பனர்கள் போல் அறிவாளிகள் ஆகிவிடலாம் என்று தப்புக்கணக்கு
போட்டு விழா எடுக்கிறார்கள்.கிருஷ்ணஜெயந்தி விழாவைவெல்லாம் தற்போது தான் பேமஷாக்கிக்கொண்டு
வருகிறார்கள்.
அவர்கள் எல்லாம் கிருஷ்ணலீலைகளும்,கிருஷ்ணனின் வாழ்க்கையையும்
படித்துப்பார்த்து இருப்பார்களா…?படித்துப்பார்த்தும் அப்படி இருக்கலாம் தம் பிள்ளைகளும்
என்று நினைக்கிறார்களா…?
எப்படி ஒரு தாயால் தன் ஆண்பிள்ளை மற்ற பெண்களுடன் கூத்தாடி
மகிழ்வதை ஏற்றுக்கொள்ளமுடியும்…?அல்லது பொய்,திருட்டு என்று வாழ்ந்த கிருஷ்ணனை தங்கள்
கடவுளாக ஏற்றுக்கொள்ள முடிகிறது.
தன் ஆண்மகனும் அந்த கிருஷ்ணனைப்போல் திருடி,பிராடுத்தனம்
பண்ணியும்,பெண்கள் பலருடன் கூடிக் களவியில் ஈடுபடுவதையும் சகித்துக்கொள்ள முடியும்?
கர்ப்பிணிப்பெண்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்
என்பதற்காக கிருஷ்ணனை வழிப்பட்டு வருகிறார்கள்.எனக்கு கிருஷ்ணன் போல் அழகான ஆண்மகன்
பிறக்க வேண்டும் என்றும்,பிறந்தால் கிருஷ்ணஜெயந்தி விழா எடுத்து சீரும் சிறப்புமாக
ஆண்டுதோறும் கொண்டாடுகிறேன் என்று வேண்டுதலையும் வைத்துக்கொள்கிறார்கள்.
ஒன்று ஆண் குழந்தை இல்லையெனில் பெண் குழந்தை பிறந்து தான்
ஆகவேண்டும்.
தப்பித்தவறி வேண்டியபடியே (இயற்கையாக)ஆண் குழந்தை பிறந்துவிட்டால்
போதும்..கிருஷ்ணன் பிறந்துவிட்டான் என்று அந்தகுழந்தைக்கு கிருஷ்ண கொண்டையும்,கிருஷ்ணன்
அணிவது போன்ற உடையும் அணியவைத்து அழகு படுத்தி கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடி மகிழ்கின்றனர்.
பிறந்ததில் இருந்து சேட்டையும்,பொய்யும்,புரட்டும்.அடுத்த
குடும்பங்களில் சென்று கலகங்களை ஏற்படுத்தி அதில் மனமகிழ்வது எல்லாம் கிருஷ்ணனின் மனபாவமாக
இருந்து இருக்கிறது.தெரிந்து மூன்று கல்யாணம்,தெரியாமல் பதினோராயிரம் பெண்களுடன் வாழ்ந்த
கிருஷ்ணன் எப்படி ஒரு கடவுளாகவோ….அல்லது பண்பிற்குரியவராகவோ…ஏன் மனிதனாகவோ கூட இருக்க
முடியும் என்று ஒரு சாதாரண மனிதர்களால் உணரமுடியாமல் போகுமா…?
அல்லது எதையுமே தெரிந்து கொள்ள முற்படாமல் யாராவது சொல்றாங்களா
அதையே கண்முன் தெரியாமல் நாமளும் பாலோ பண்ணுவோம் என்று பண்ணிக்கொண்டு இருக்கிறார்களா……மக்கள்…..!
அந்த மக்களுக்கு எப்படி புரிய வைப்பது ..?இதையெல்லாம் யார்
எடுத்துச்சொல்வது..?
சொன்னால் புரியும் மனநிலையில் இருப்பார்களா…?அல்லது படித்துத்தெரிந்து
கொள்வார்களா….?
எனக்கு என்னவோ சந்தேகம் தான்.மக்கள் பகுத்தறிவு பாதையை விட
மூடநம்பிக்கை பாதைக்குத்தான் அதிகமாக இழுத்துச்செல்லப்படுகிறார்கள்.அவர்களை நினைத்தால்
வேதனையாக இருக்கிறது.
கிருஷ்ணனின் லீலைகளுக்கு அவனின் அயோக்கியத்தனத்து இரண்டு
உதாரணம் சொல்கிறேன்.
கிருஷ்ணன் மன்னன் ஒருவனைச் சந்திக்கச்செல்கிறான்.அவனுக்கு
நல்ல ஆடை வேண்டும்,அப்போது அரண்மனைக்குச் சலவை செய்து கொடுப்பவனைக்கண்டு டிரெஸ் கேட்கிறான்.அரசன்
உடையது எனவே நான் கொடுக்கமாட்டேன் என்றவனை தலையில் தட்டி அவனை சாகடித்து டிரெஸ்ஸை திருடிச்செல்கிறான்
கிருஷ்ணன். அடாவடித்தனம் பண்ணி ஜெயிக்கும் இவன் எப்படி கடவுளாக முடியும்,
பின்னர் வழியில் பூ விற்கும் பாட்டியைக் காண்கிறான்.அவள்
கூனு விழுந்த கிழவியாக இருக்கிறாள்.தனக்கு சந்தனம் பூசிவிடும் படி கேட்கிறான்.அவள்
பூசிவிட்டதும்,அந்தப்பாட்டியின் கூன் விழுந்த முதுகை சரிசெய்ய இடுப்பு எலும்பில் கை
வைக்கிறான்.(அந்தக்காலத்து ஆர்த்தோ டாக்டர் போல) உடனே கூன் சரியாகி பாட்டி இளமை வடிவம்
எடுத்து கிருஷ்ணனின் கை பட்டதால் உணர்ச்சி கொள்கிறாள்.கிருஷ்ணன் இது கண்டு மகிழ்ந்து
அந்தப்பாட்டியுடன் களவிகொள்கிறான்.என்ன ஒரு முட்டாள் தனமான செயல்.இதை வரலாறும் சொல்கிறது.
அந்த வரலாறைப்படித்தும் புத்தி இல்லாமல் கிருஷ்ணன் அவதாரமாக
தன் பிள்ளைகளை நினைத்துக்கொண்டு அப்படியே கிருஷ்ணனைப்போல் வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கிருஷ்ணா தயவு செய்து நீ கடவுள் அவதாரமாக இருந்தால் உடனே
கிளம்பி வந்து உன் நடத்தையை எல்லோருக்கும்
புரிய வை.இல்லையெனில் பகுத்தறிவு பார்வை பார்க்கும் எங்களுக்கு நீ நல்லவனாகவாவது ஆகிக்காட்டு…….
இரண்டில் எது நடந்தாலும் சந்தோஷம் தான்……இல்லையெனில் இந்த
மூடநம்பிக்கையில் தினந்தோறும் ஊறிப்போய் இருக்கும் மக்கள் இன்னும் மூடநம்பிக்கை வியாதிக்காரர்கள்
ஆகி,அதற்கான மருந்தும் கிடைக்கப்பெறாமல் கஷ்டப்படப்போகிறார்கள்…..
//கிருஷ்ணன் மன்னன் ஒருவனைச் சந்திக்கச்செல்கிறான்.அவனுக்கு நல்ல ஆடை வேண்டும்,அப்போது அரண்மனைக்குச் சலவை செய்து கொடுப்பவனைக்கண்டு டிரெஸ் கேட்கிறான்.அரசன் உடையது எனவே நான் கொடுக்கமாட்டேன் என்றவனை தலையில் தட்டி அவனை சாகடித்து டிரெஸ்ஸை திருடிச்செல்கிறான் கிருஷ்ணன்.//
ReplyDeleteகடவுளாக இருக்கும் கிருஷ்ணனுக்கு ஒரு நல்ல ஆடைகூடவா இல்லை..?
//கிருஷ்ணன் இது கண்டு மகிழ்ந்து அந்தப்பாட்டியுடன் களவிகொள்கிறான்.என்ன ஒரு முட்டாள் தனமான செயல்.இதை வரலாறும் சொல்கிறது.//
சும்மாவா சொன்னார் பெரியார் "பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்" என்று. முக்கியமாக பெண்கள் இதில் விழிப்புணர்வு பெற வேண்டும் அப்பொழுதுதான் தான் வளர்க்கும் குழந்தைகளுக்கு இது போன்ற மூடக்கதைகளைச் சொல்லி வளரும் நிலை மாறும் மாற வேண்டும் என்பதே நோக்கமாக நாம் முயற்சி செய்ய வேண்டும். உங்களைப் போன்ற பெண்கள் பதிவு இதற்கு துணைபுரிய வேண்டும் பதிவுக்கு நன்றி சகோ....
இனியவன்.....
மிக்க நன்றி சகோ....
Deleteஆழ்ந்த சிந்தனை,,, அருமையான கேள்வி.,, ஆனால் எதற்காக இப்படி சொல்லியிருக்கக்கூடும் என்று கொஞ்சம் சிந்தித்தால்...... எதற்கும் எதுவும் தடை இல்லை என்பதுதான்... இருக்குமோ ,,,? அல்லது மனம் போன போக்கிலே,,,மெடிடேசன் தேவை என்று வைத்து கொள்வதா..?
ReplyDeleteஇல்லை மூடநம்பிக்கை சிலர் வளர்த்துவிடுகின்றனர்..அதையும் நம் மக்கள் நம்பிக்கொண்டு தங்களோடு தங்களது வளரும் குழந்தைகளையும் மூடநம்பிக்கை பலியிடுகின்றனர்.மெடிடேஷன் என்பதெல்லாம் பொய்.இதெல்லாம் சில ஜாதிக்காரர்களால் ஏற்படுத்தபடும் முட்டாள் தனமான செயல்பாடு...
Delete