Saturday 6 April 2013

பார்ன் டூ வின்

பார்ன் டூ வின் என்ற அமைப்பை சுவேதா என்ற நங்கை(திரு) ஆரம்பித்துள்ளார்.அந்த அமைப்பின் அங்கத்தினராக எனக்கும் ஒரு பொறுப்பை கொடுத்துள்ளார்.வரும் 29 ந் தேதி திருநங்கைகள் தினத்தன்று, மாலை 5 மணிக்கு அமைப்பின் சார்பாக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநங்கைகளை அரவணைத்துக்கொள்ளும் அன்னையர்களுக்கு விருதும்,திருநங்கையாக இருந்து ஜெயித்து வாழுபவர்களுக்கு விருதும் கொடுத்து கவுரவிக்கும் விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன..இந்த விழாவுக்கான செலவுகளை சமாளிக்க உங்களைப்போன்ற நல் உள்ளங்கள் முடிந்த அளவு டிக்கெட்(100,200,500) வாங்கி உதவினால் அந்த அமைப்பு சிறம்பெற்று வாழும்..அந்த அமைப்பின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான் விழிப்புணர்வு..சமூக சேவை மட்டுமே...எனவே தயவு செய்து அதற்கு மக்கள் ஆதரவு அளிக்கவும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்...இந்த அமைப்பை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்த  உள்ள சுவேதா என்ற நங்கை(திரு) ஐ ஏ எஸ் க்கான படிப்பதற்கான இந்த அமைப்பில் நானும் ஒரு அங்கத்தினர் என்பதில் பெருமை அடைகிறேன்.முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்..என்பது சிறப்பு செய்தி......

No comments:

Post a Comment