Wednesday 17 April 2013

காமசூத்ரா.......


இரவு 11 மணிக்கு தொலைக்காட்சியின் அந்தரங்க நிகழ்ச்சியில்.,
கணவன் மனைவியிடையே தோன்றும் காதலுக்கும்,காமத்துக்கும் ஒரு கட்டுப்பாடு வரக்கூடாது,அப்படி வந்தால்…ஒருத்தருக்கு ஒருத்தர் மேல் இருக்கும் அன்பும் கட்டுப்பாடாக அமைந்துவிடும். நம் இல்லறம் சிறக்கவேண்டுமெனில்..கணவன் மனைவியிடையே அந்தரங்க இன்பம்….சுகமானதாக அமைய வேண்டும்.
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்த சுவேதா காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், தொலைக்காட்சியை ஆப் செய்தாள்.வேகமாகச் சென்று கதவின் சிறுதுளை வழியாகப் பார்த்தவள் அது தன் கணவன் என்று தெரிந்ததும்,கதவைத்திறந்தாள்.
ஏங்க இவ்வளவு லேட்..என்ற சுவேதாவை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் சேகர்.
நான் கேட்டுட்டே இருக்கேன்ல.ஏங்க இவ்வளவு லேட் என்றாள் மறுபடியும்.
ஆபிஸில் கொஞ்சம் ஆடிட்டிங் வொர்க் முடிக்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இப்போ என்ன ஆச்சு.வந்ததும் கேள்விக்கணைகளை அடுக்கனுமா..?என்று கோபமாகக் கேட்ட கணவனை முறைத்தபடி தோசை ரெடி பண்ண கிச்சனுக்குள் நுழைந்தாள் சுவேதா.
பாத்ரூம் சென்று புத்துணர்வுடன் வந்தான் சேகர்.
இன்னைக்கு என்ன டிபன் சுவேதா என்றான்.
ம்ம்ம்,வெங்காய சாம்பாரும்,தோசையும் என்று சொன்னபடி தோசையை அடுக்க ஆரம்பித்தாள் அவன் தட்டில்.
ஏய் சுவே.. போதும் அடுக்காத…மூனு மட்டும் ஊத்திட்டு வா நீயும் நானும் சேர்ந்தே சாப்பிடுவோம் என்றான் சேகர்.
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
மணி 12 த்தாண்டியது,படுக்கையை நெருங்கிய சேகர்…அப்பாடா இன்னைக்கு ரொம்ப அலுப்பா இருக்கு,நான் தூங்குறேன் சுவே..குட்நைட் என்றபடி படுத்து 5ந்தே நிமிடத்தில் குறட்டை விட ஆரம்பித்தான்.
இப்படித்தான் ஒருவார காலமாக அலுத்துப்போய் படுத்துவிடுகிறான்.திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.அதற்குள் அலுத்துவிட்டதா நம்மை என்று சற்று கோபத்துடன் படுத்தவளுக்கு தூக்கம் என்பது இம்மி அளவுகூட வரவில்லை.எழுந்து சென்று தொலைக்காட்சியை மறுபடியும் ஆன் செய்தாள்.
காமசூத்ரா என்பது நமது உடலின் தேவையும்,உள்ளத்தின் தேவையும் வெளிக்கொண்டு வர உதவி செய்கிறது.இந்தக் கலை பொதுவாக ஆண்களிடம் நிறைந்து காணப்படும்.ஆனால் பெண்களுக்குத்தான் செக்ஸில் ஆர்வம் இருக்காது,அதனால் இதுபோன்ற புத்தகங்களை,அல்லது செயல்முறை ஆவணத்தை வாங்கிப்பார்ப்பதன் மூலம் பெண்களின் உணர்வுகள் தூண்டப்படும்…எனவே…..என்றதும் பட் என அணைத்தாள் தொலைக்காட்சியை…….
பெண்களுக்கு ஆர்வம் குறைவாம்…,ஆண்களுக்கு அதிகமாம்……முணுமுணுத்தப்படி ஹெலன்கெல்லரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்….சுவேதா….
உள்ளிருந்து சேகரின் குறட்டை சத்தம் இன்னும் சற்று கூடியது……..

No comments:

Post a Comment