Tuesday 16 April 2013


பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் இடர்பாடுகள்:

பெண்களுக்கு மேலோட்டமாக அல்லது தானாக ஏற்படுத்திக்கொள்ளும் இடர்பாடுகள் குறித்து பார்த்தோம்.இம்மாதிரி இடர்பாடுகள் தானாக தோற்றுவித்துக்கொள்வது.ஆனால் இயல்பாகவே பெண்களுக்கு என்ன வழிகளில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன என்பது பற்றி இனி பார்ப்போம்.
மாதவிடாய்,கர்ப்பகாலம்,மெனோபஸ் டைம், இந்த மூன்றும் பெண்களுக்கு ஏற்படும் சந்தோஷமான விசயம் தான் எனினும்.இந்த மூன்று கட்டங்களையும் கடப்பதற்குள் பெண்கள் மிகவும் நலிவுற்று போவார்கள்.எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும்,மனரீதியிலும்,உடல் ரீதியிலும் இம்மூன்று விசயங்களில் தோற்றுப்போவார்கள்.முதலாவதாக மாதவிடாய் பிரச்னை பற்றி பார்ப்போம்.
மாதவிடாய்:
பெண்கள் வயதுக்கு வருதல் அதாவது,மாதவிடாய் ஆரம்பிக்கும் காலகட்டம் பொதுவாக பெண்களுக்கு 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் ஏற்படக்கூடியது.பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கோடிக்கணக்கான சினைமுட்டைகளை வாங்கிக்கொண்டு தான் பிறக்கிறார்கள்.
அதாவது ஒருபெண் தான் பிறக்கும் போதே இன்னொரு உயிரையும் படைக்கும் அளவுக்கு ஒரு சக்தியுடன் பிறக்கிறாள்.இது ஒரு வரம் தான்.ஆனால் சாபம் என்னவெனில் அவள் பூப்பெய்தும் காலம் வரை அந்த சினைமுட்டைகளின் அளவு குறைந்து கொண்டே செல்லும்.கோடிக்கணக்கில் இருக்கும் சினைமுட்டை ஒரு பெண் தன் பருவவயதை அடைவதற்குள் ஒரு லட்சம் சினைமுட்டைகள் மட்டுமே ஓவரி என்று சொல்லப்படும் கருத்தரிப்பு குழாயினில் ஒளிந்து கொண்டு இருக்கும்.
பூப்பெய்தும் காலம் வந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பெண்ணுக்குரிய அழகை எடுத்து காண்பிக்கிறது.ஆனால் ஒரு பெண் வயதுக்கு வந்ததிலிருந்து மெனோபாஸ் டைம் வரை வரும் மாதமாதம் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்.இதனால் சில பெண்களுக்கு அதிக டென்ஷன்,மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புக்கூட ஏற்பட வாய்ப்புள்ளது.மாதம் தோறும் சில பெண்களுக்கு சுழற்சி முறையில் இரத்தப்போக்கு உண்டாகும்.சில பெண்களுக்கு 35 நாட்களுக்கு மேலும் 45 நாட்களுக்குள்ளும்,சில பெண்களுக்கு 4 மாதங்கள் கூட இரத்தப்போக்கு தடைபட்டு வரும்.
மாதவிடாய் வரும் போது அநேகப்பெண்கள் வயிற்று வலி காரணமாக துடித்துப்போய்விடுவார்கள்.ஒருசில பெண்களுக்குத்தான் எந்த வித அறிகுறியும் இல்லாமல் பீரியட்ஸ் வந்து போகும்.அப்படிப்பட்ட பெண்கள் மிகவும் சந்தோஷமானவர்கள்.ஏனெனில் மாதந்தோறும் தோன்றும் மூன்று நாள் வயிற்றுவலி என் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு சிலருக்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துப்போய்விடுவார்கள்.
இந்த இரத்தபோக்கு காரணமாக சில பெண்கள் அந்த மூன்று நாட்களில் மன உளைச்சலில் எந்தவித வேலைகளையும் செய்யமுடியாமல் அல்லல் படுகிறார்கள்.ஏன் அவர்களால் வீட்டு வேலைகள் கூட ஒழுங்காக செய்யமுடியாமல் படுத்தே கிடப்பார்கள்.அப்படிப்பட்டவர்கள் மிகவும் வீக்காக இருக்கிறார்கள்,அல்லது அனுமிக்காக(இரத்த சோகை) இருக்கிறார்கள் என்று பொதுவாகச்சொல்வார்கள்.மாதவிடாய் வருவதால் உடலில் உள்ள கழிவுகள். இறந்த சினைமுட்டைகள் வெளியேற்றப்படுகிறது.மாதவிடாய் வந்துமுடிந்ததும்.பெண்கள் சற்று சுதந்திரமாக உணர்வார்கள். தொடரும்.

No comments:

Post a Comment