Monday 3 June 2013

கண்ணகி காவியத்தில் மட்டுமே கற்புக்கரசி....!



ஆம்,என்பர் முப்பால் உணர்ந்தவர்கள்..இலக்கியவாதிகளுக்கு கண்ணகி ஒரு கவிதை.ஏன் கலைஞரே கூட கண்ணகிக்கு சிலை வைத்து,அவருக்குச் சிறப்பு செய்தாரே….?இப்படி ஒரு பெண் வாழ்ந்தாள்,காவியத்தில் இடம் பெற்றாள்,என்பதெல்லாம் நியாயம் தான்.

அதற்காக சிலை எடுப்பதும்,கோவில் கட்டுவதும்,கண்ணகி தான் நாட்டில் கற்புக்குப்பேர் போன கரசி என்று சொல்வதெல்லாம்..ஏற்றுக்கொள்ள  என் மனம் மறுக்கிறது.

மண் மகள் காலடி படேள்…என்று கண்ணகி தன் திருபாதக்கமலம் கூட நிலத்தில் பதியாதவாறு வளர்க்கப்பட்டாளாம்.

ஏன் அப்படி ஒரு குழந்தைதனமாக ஒரு பெண்ணை அவர்களது பெற்றோர்கள் வளர்த்தார்கள்?.முதல் கேள்வியே பெற்றோர்களைத்தான் கேட்கவேண்டும்,அல்லது சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளை கேட்க வேண்டும்.

செல்லமாக மகளை வளர்த்த பெற்றோர்களுக்கு,கண்ணகியை அறிவுப்பூர்வமாக வளர்க்க முடியவில்லையே ஏன்…?அப்பெண் தன் அம்மா,அப்பா கோண்டாக இருந்துவிட்டு பின்னர்,தன் கணவரின் கோண்டாக மாறியதால் வந்த வினை தான்,இந்த காவியம்..இந்த காவியம் கிடைப்பதற்காக ஒரு பெண் முட்டாள் ஆகியிருக்கிறாள் என்று கோபமாக வருகிறது.

அல்லது இளங்கோவடிகள் தன் கதைக்கு இப்படித்தான் நாயகி அமைய வேண்டும் என்பதற்காக திரித்து கண்ணகியை இன்னோஸண்டாக கதையில் காட்சிப்பொருளாக அமைக்கப்பட்டாளா….?இந்தக்கேள்விக்கு எல்லாம் நம்மிடம் பதில் இல்லை.

இந்தக்காலத்தில் இளங்கோவடிகள் இருந்து இருந்தால் நான் அவரை என் கேள்விக்கணைகளால் ஒருபிடி பிடித்து இருப்பேன்.

தன் கணவரின் தேவைகள் அனைத்தையும் செய்த ஒரு பெண்,தன் கணவர் இன்னொருவளுடன் சென்றபின் நேராக வீடு தேடிச்சென்று,கணவரை உதைத்து,அப்பெண்ணையும் உதைத்து இழுத்துவரச்செய்து இருக்கலாம் என்று சொல்லலாம்,கேட்கலாம்,ஆனால் நான் அதைக்கேட்கப்போவது இல்லை.

கோவலன் தன் காதலினால்,கசிந்துருகி இன்னொரு பெண்ணிடம் மயங்கிக்கிடக்கும் போது,கண்ணகியிடம் அந்த தேடல்,பொருள் கிடைக்கவில்லை என்று தானே அர்த்தம்.அவள் தன் கணவருக்கு வெட்கத்தினாலோ,நாணத்தினாலோ ஒரு இச்சையை சரிவரக்கொடுக்காமல் தான் அடுத்தவளிடம்,மாதவியிடம் தன் கணவரை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டாள் என்பது என் கணக்கு.
கணக்கு எல்லா நேரங்களிலும் சரிவர அமையாது.ஆனால் இதுவும் சரியான விடையாக வைத்துக்கொள்ளலாம்.

சரி,கோவலன் அங்கே மயங்கிக்கிடக்கும் போது,ஒன்று கண்ணகி தன் சொத்துகளை பார்த்துக்கொண்டு தன் வீட்டு கணக்கு வழக்குகளை கவனித்துக்கொண்டு இருந்தால்,இந்தமாதிரி அவன் திரும்பி,திருந்தி வரும் போது கஷ்டப்பட்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று அவசரகால முடிவை எடுத்து இருக்கத்தேவையில்லை.

இரண்டு மாதவி எவ்வளவு கிளவராக தன் காதலனை கைக்குள் போட்டுக்கொண்டு,தன் அம்மாவையும் கேள்வி கேட்காமல்,காதல் பரத்தையால் மயங்கிபோய் கோவலைனை கட்டி அணைப்பதிலேயே…கூர்மையாக இருந்து இருக்கிறாள்.அந்த தகுதியாவது இப்பெண் கண்ணகியிடம் இல்லை என்பது எனக்கு கோபம்,அவள் தன் வேலையாட்களை அனுப்பி பணம் ,நகை வாங்கிவரச்சொன்னால்,இவளும் தன் கணவனின் சேம நலம் விசாரித்துவிட்டு எல்லாப்பொருட்களை அள்ளிக்கொடுத்துவிட்டு,கடைசியில் உடல் சுகமும் போய்,உள்ள சுகமும் காலியாகி நிர்கதியாகி நின்றாள்.

ஏன் அவளுக்கு சமயோசித புத்தி இல்லாமல் போனது,அல்லது அவ்வாறு காட்சி எழுதப்படவில்லையா…?

பெண் என்பளவள்,புத்திசாலியாக மட்டும் அல்ல சமயோசித புத்தி கொண்டவளாக அமைய வேண்டும்,அவள் தான் வாழ்வில் வெற்றி கொள்வாள்.கண்ணகியோ மிகுந்த 

பழைமைவாதியாகவும்,பொறுப்பில்லாதவளாகவும்,அன்புக்கு மட்டும் கட்டுப்பட்டவளாகவும் அங்கே காட்டப்படுகிறாள்.

பின்னர் தன் கணவர் கொலையுண்டதும்,கோபம் வெறி இவையெல்லாம் தலைக்கேறி..அரசை சந்தித்து வீர ஆவேசமாக பேசி,மதுரையை எரிக்கத் தோன்றிய துணிவு கதையின் ஆரம்பத்திலேயே இருந்து இருந்தால்..காவியத்தில் கண்ணகி முட்டாள் ஆகியிருக்கமாட்டாள்.நமக்கு கண்ணகி மட்டுமே பத்தினி அல்ல எத்தனையோ அறிவுள்ள,புத்திசாலியான,கணவனை கைக்குள் போட்டுக்கொள்ளும்,சமயோசித புத்திகொண்ட பத்தினிகள் இருக்கிறார்கள்..என்பதும் தெரிந்து இருக்கும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் இது எதிர்ப்புக்காக எழுதப்பட்டது அல்ல,கண்ணகியை இப்படிக்காட்டி இன்னும் பெண்களுக்கு கண்ணகி என்றாள் கற்புக்கு அரசி ,இப்படித்தான் குழந்தைதனமாக இருந்தால் கணவர்கள் எல்லாம் தப்பு செய்துவிட்டு வந்தால் மனைவிகள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டுக்கோப்புகள் வைத்து பெண்களை ஒரு போர்வைக்குள் திணிக்காமல் இருந்து இருப்பார்கள்.

தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள தன் திறமைகளையும்,தன்னம்பிக்கையும்,தன்னார்வத்தையும் வளர்த்துக்கொண்டு வாழும் ஒரு பெண் தான் என் கண்முன் தோன்றும் உண்மையான கண்ணகியாக நிலைத்து இருப்பாள்.அவளுக்கு சிலை முக்கியம் அல்ல…கற்சிலையாக நிலைத்து இருப்பதைவிட உயிருழுள்ள வாழும் வாழ்க்கையை சிலையாகவும்,ஒரு சிற்பியாகவும் இருந்து தன் குடும்பத்தையும் தன்னையும் படைத்துக்கொள்வார்கள் இன்றைய திறமைமிக்க கண்ணகி(கள்)……..

2 comments:

  1. கோவலன் தான் கற்புக்கரசர்...! அதனால் இன்று பல கே(கோ)வலங்கள்...

    ReplyDelete
  2. மிகவும் கடினமானவற்றையே கையில் எடுக்கிறீர்கள்

    ReplyDelete