தஞ்சாவூரில் உள்ள ஆயிரமாவது ஆண்டு பழமையான கோவிலான (ராஜராஜசோழனால்
கட்டப்பட்ட) தஞ்சை பெரிய கோவிலையும் விட மிக பழமையான கோவில் திருவாரூரில் வீற்றிருக்கும்
தியாகராஜர் சாமி திருக்கோயில்.
ஆரூரா…தியாகேசா...
இச்சாமி தான் திருவாரூரின் சிறப்புமிக்க தான ”தேரில்” பவனி
வரும் சாமி. தியாகராஜருக்கு கமலாம்பிகை என்ற காதலி உண்டு.அக்காதலிக்கும் தியாகராஜரின்
மூலஜ்தானத்துக்குக்கு அருகில் ஒரு மண்டபத்தில் சிலையாக கமலாம்பிகை அமைக்கப்பட்டு,எல்லோராலும்
(தியாகராஜரைவிட கமலாம்பிகையைத்தான்) முக்கியமாக வணங்கப்பட்டும் வருகிறது.
அவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை,திருவாரூரில்
மூன்று விசயம் நடந்தால் தியாகராஜர் காதலி கமலாம்பிகையை கைப்பிடிப்பார் என்பது ஐதிகமாம்.
அதாவது,முதல் விசயமாக தியாகராஜர் தன் பாதங்களை என்று முழுமையாக காண்பிப்பாரோ(வருடத்தில்
ஒருநாள் மட்டும் தியாகராஜரின் ஒருபாதம் மட்டும்
அபிஷேகத்துக்கு காண்பிக்கப்படும். மற்றநாட்கள் எல்லாம்…அவர் தன் பாதங்களை யாருக்கும்
காண்பிப்பது இல்லை.)
இரண்டாவது,கமலாலயக்குளம் வற்ற வேண்டும்…(கோவிலுக்கு முன்னால்
குளம் ஒன்று உள்ளது.அக்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும் வற்றாது).
மூன்றாவது,கல்தேர் நகர வேண்டும். (கன்றினைக்கொன்றதால் தன்
மகனை தேர்க்காலில் இட்டுக்கொன்ற மனுநீதிசோழன் வரலாற்றை சொல்லும் வகையில் திருவாரூரில்
கல்தேர் ஒன்று செய்து வைத்து இருப்பார்கள்.)அந்தக் கல் தேர் எப்படி தானாக நகரும்…?
இம்மூன்றும் நடந்தால் கமலாம்பிகையை திருமணம் செய்துகொள்வதாக
தியாகராஜர் வாக்குறுதி கொடுத்துள்ளார்…
ஆக.,இம்மூன்றுமே நடக்காது என்று தெரிந்தும் கமலாம்பிகையை
ஏமாற்றி ஈவ் டீசிங் செய்து இருக்கிறார் தியாகராஜர்.சோ அவர் மீது ஈ பி கோ 320 கீழ் வழக்குப்பதிவு
செய்ய வேண்டும்…
சரி அத விடுங்க…தியாகராஜராவது பரவாயில்ல..ஆயிரம் ஆண்டுகளா
ஒரு பொண்ண தான் ஏமாத்திட்டு இருக்கார்.பட் நம்ம ருணவிமோசகர் இல்ல….அதாங்க கடைசியா சாமி
கும்பிட்டு போகும் போது கைதட்டிட்டு காது கேட்குதான்னு கிண்டல் பண்ணிட்டுப் போவோம்ல..
அந்த சாமி தான்,அது கேட்பார் நாதியற்று பாழடைந்து கிடந்தது
திருவாரூர் கோவிலில் ஒரு ஓரமாக..
சமீபத்தில் அக்கோவிலுக்குச் சென்று பார்த்தோம். வெள்ளிக்கவசம்
அணிந்து,வெள்ளிக்கொடை எல்லாம் வைத்து சாமிக்கு லைட் எல்லாம் போட்டு ஜெகஜோதிலட்சுமியாய்…சாரி
ஜோதியாய் மின்னினார்.
என்னங்கய்யா திடீர்னு ஆச்சு ”இச்சாமிக்கு வந்த வாழ்வைப்பாரேன்”
என்று தியாகராஜரே பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்துட்டார் ருணவிமோசகர்.
எவனோ கிளப்பிவிட்டு இருக்கான்.இந்த சாமியை கும்பிட்டா கடன்
தொல்லை அடைந்து,மனதில் இருக்கும் பாரம் எல்லாம் இறங்கி சந்தோஷ வாழ்வு கிடைக்கும் என்று…
உடனே நம்ம மக்கள் கிட்ட கேட்கவா வேணும்…ஓடி ஒடி அச்சாமிக்கு
காணிக்கை செய்கிறார்கள்.இதனால் ஆசாமிகள் கொழிக்கிறார்களோ இல்லையோ ருணவிமோசகர் நன்றாக
கொழிக்கிறார்.
தினமும் பாலில் அபிசேகம் தான்,பொங்கல் தான். வெள்ளி ஆடைதான்
கொடை தான் பளிச்சுனு லைட்டு தான் ,கலக்குற சந்துரு லெவலுக்கு கலக்குறாரு நம்ம ருணு..
ருணவிமோசகரிடம் திருநீறு வாங்கி பூசிக்கொண்டோம்னா…உங்க கடன்
தொல்லை கண்டிப்பா நீங்கிடும்.
அதுனால இனிமே பேங்க்ல கூட கடன் வாங்கிட்டு நம்ம ருணுகிட்ட
திருநீறு வாங்கிப் பூசிக்கோங்க……..அப்புறம் பாருங்க மகிமையை பேங்க்காரவங்க கூட கடனை
திருப்பிக்கேட்க மாட்டாங்க..
நீங்க எஸ்கேப் ஆயிடலாம். மீறிக் கடனைத் திருப்பிக் கேட்டா
எல்லாம் ருணவிமோசகர் தான்னு அவரை கைக்காட்டிவிட்டுடலாம்.
நமக்குத்தேவை கடன் பத்திரம் அல்ல..அல்ல…அல்ல….ருணவிமோசகருடை
திருநீறு பொட்டலம்..பொட்டலம்..பொட்டலம்…….!
No comments:
Post a Comment