Friday 21 June 2013

கணவனின் இன்னொருமுகம்....!


ஒருநாள் ,தன் கணவனின் செல்போனை மனைவி பார்க்கும் சூழல் ஏற்பட்டது.நம்ம கணவர் தானே என்ன சொல்லப்போகிறார் என்று நினைத்த மனைவி போன் கால்ஸ்,மற்றும் மெஸேஸ்களை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.


கணவனின் நண்பர்கள் பலர் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார்கள்.சில ஆண் நண்பர்கள்..ஒரு சில பெண் நண்பர்கள் என பலர் அனுப்பிய எஸ் எம் எஸ்களையும் படித்துக்கொண்டே வந்தவள்.ஒரு பெண் அனுப்பிய மெஸேஸ்கள் மட்டும் கொஞ்சம் நெருடலாக இருப்பதாக உணர ஆரம்பித்தாள்.


அப்பெண் கொஞ்சம் ஓவராக தன் கணவரின் மீது அன்பு கொண்டவர் போலவும்,ஆர்வம் போலவும் அனுப்பியிருந்ததைக்கண்டதும் பெண்ணுக்கே உரிய பொஸஸ்ஸிவ் அவளுக்குள்ளும் புகுந்து கொள்ள ஆரம்பித்தது.


இதுவரை அவள் கணவன் மீது சந்தேகம் கொண்டது கிடையாது,அதனால் கணவனைப்பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தாள். ஆனால் இப்போது ஏற்பட்ட சின்ன சஞ்சலத்தினால் அவளுக்கு ஆர்வம் அதிகம் ஆயிற்று. உடனே கணவனுடைய மெயில்,பேஸ்புக் ,டிவிட்டர் என செக் பண்ண நினைத்தாள்


எப்படியாவது கணவனின் அந்தரங்க விசயங்களை தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க ஆரம்பித்தாள்.

ஒருநாள் கணவன் பேஸ்புக் ஓப்பன் பண்ணி யிருக்கும்போது,போன் அடித்தது,உடனே கணவன் பேஸ்புக்கை லாக் அவுட் பண்ணாமல் அப்படியே விட்டுவிட்டு வெளியில் எழுந்து சென்றுவிட்டான்.இவள் அவசரமாக அவனது பேஸ்புக் அக்கவுண்டை நோட்டமிட ஆரம்பித்தாள்.


இன்பாக்ஸில் அந்த குறிப்பிட்ட பெண் மட்டும் அதிகமான உரிமை எடுத்துக்கொண்டு நட்போடும்,அதீத கரிசனத்தோடும், சாட் பண்ணியிருந்தாள்….பார்த்துக்கொண்டு வரும்போது இவளது கணவன் அந்தப்பெண்ணிடம் ஓவராக வழிந்து பேசியிருப்பது தெரிந்தது.


என் தோழி, உனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்…நீ தான் எனக்கு எல்லாம்.உன்னிடம் மட்டுமே நான் உரிமை எடுத்துக்க முடியும்..நாம் சந்திக்கலாம்.என் மனைவி வந்துவிட்டாள் நான் செல்கிறேன்.இல்லையென்றால் கத்துவாள் என்பது போன்று வார்த்தைகள் இடம்பெற்று இருந்தன.


இவளுக்கு பயங்கரமான அதிர்ச்சி நமக்குத்தெரியாமல் இவ்வளவு தூரம் பேசியிருக்கிறார்.அதுமட்டுமல்லாது,அதிக உரிமை எடுத்துக்கொண்டும்,தன்னைப்பற்றி குறையையும் பகிர்ந்து கொண்டு இருந்து இருக்கிறார்.


நாம் அவர்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தோம்.அவருக்குள் வேறு ஒரு உலகம் இருந்து இருக்கிறது.நம்மிடம் இவ்வளவு நாள் நடித்துக்கொண்டு இருந்து இருக்கிறார்.


ஏன்,எதற்கு,நாம் இதுவரை அவரிடம் எதையும் மறைத்தது கிடையாதே..?எதற்காக நாம் இருக்கும் போது இன்னொரு பெண்ணிடம் இவர் இதுபோல் பகிர்ந்துகொள்கிறார் என்று அவளது மனதில் ஏகப்பட்ட கேள்விகளை சுமந்துகொண்டு அவசர அவசரமாக முகநூலில் இருந்து தன் பார்வையை நகர்த்தி வேறு பக்கம் சென்றுவிட்டாள்.


மனதிற்குள் ஏகப்பட்ட போராட்டம்,அவளது கணவன் அவளை ஏமாற்றிவிட்டதாகவே நினைத்தாள்.அன்றிலிருந்து அவளது கணவனை மனதுக்குள் வெறுக்க ஆரம்பித்தாள்.எதையும் கணவனிடமும் கேட்டுக்கொள்ளவில்லை.


கணவன் இயல்பாகவே இருந்தான்.ஆனால் அவனது மனைவியால் இயல்பாக இருக்கமுடியவில்லை.இரவு படுக்கையைக் கூட இவளால் சந்தோஷமாக களிக்க முடியவில்லை.இவன் அனுப்பிய மெஸேஸ்கள் எல்லாம் இவளது தூக்கத்தில் கூட நினைவில் வந்து இவளை தூங்கவிடாமல் செய்தது.


இப்படியாக நாட்கள் செல்ல ஆரம்பித்தன.கணவனுக்கு மனைவி ஏன் விலகியே இருக்கிறாள் என்பது குறித்து நாளடைவில் மனதிற்குள் தோன்ற ஆரம்பித்தது.


சந்தோஷமான இரவுகளில் கூட அவளுக்கு விருப்பம் இல்லாமையை அவளது செயல்பாடுகள் காட்டிக்கொடுத்தது.அவன் தன் மனைவியிடன் கேட்டேவிட்டான்.


என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறாய்…..??தொடரும்………!

2 comments:

  1. /// கணவனின் அந்தரங்க விசயங்களை தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க ஆரம்பித்தாள்... ///

    அந்தக் கால கதை போல...

    அப்புறம்...?

    ReplyDelete
  2. It hu eppadiyum nadanthe aahum. Thummalaiyum kathalaiyum adakki maraikkathe,at hu velippasa koodatha idathil,nerathil velipadum v.muthu

    ReplyDelete