Thursday 27 June 2013

பெண்களின் மருத்துவம்.....!


தைராய்டு பிரச்னைகளுக்கு இன்னும் முழுமையான மருத்துவம் ஏதும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

ஏனெனில்,தைராய்டு ஒருமுறை வந்துவிட்டால் தொடர்ந்து வாழ்நாள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமாகிறது.

காலையில் வெறும் வயிற்றில் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொருவரின் தைராய்டு அளவைப்பொருத்து அளவு 25 mg ,50 mg,100 mg, என்ற லெவலில் உட்கொள்ள வேண்டும்.


அதில் ஹைபோ தைராய்டு,ஹைப்ரோ தைராய்டு என்ற இரண்டு வகை தைராய்டு உள்ளது ஹைபோ என்பது லோ தைராய்டு. அதாவது,தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது.இதனால் உடல் எடை அதிகரிக்கும்.வழக்கத்தை விட நமது எடை கூடுதலாகும் போதே தைராய்டு செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.


சிலருக்கு உடல் எடை குறைவாகிக்கொண்டே போகும் என்ன சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காது.அவர்களும் கண்டிப்பாக டாக்டரை அணுகி தைராய்டு செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.

தைராய்டின் அறிகுறிகள்:

உடல் வலி,மூட்டு வலி,அதிகமான உடல் எடை,குறைவாகும் உடல் எடை,உடல் சோர்வு,கோபம்,கை,கால் நடுக்கம்,உடல் சூடாகவே இருத்தல் கழுத்துப்பகுதியில் வீக்கம்,முகம் வீக்கம்,இர்ரெகுலர் பீரியட்ஸ்,இவை எல்லாம் தைராய்டின் அறிகுறிகள் ஆகும்.

தைராய்டு பிரச்னை இப்போது பெண்களின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது.சிலர் கவனிக்காமல் விடுவதால் ஆப்ரேஷன் வரை கொண்டு போய் விட்டுவிடுகிறது.

கழுத்தில் நரம்பு பகுதியில் ஆப்ரேஷன் பண்ணுவார்கள்.அங்கு கட்டி போல் ஃபார்ம் ஆகிவிடும் தைராய்டு சுரப்பி அதை ரிமூவ் செய்வார்கள்.மேக்ஸிமம் ஆப்ரேஷனுக்கு போகாமல் தவிர்க்க வேண்டும்.


இந்த சுரப்பி மீண்டும் மீண்டும் வளரக்கூடியது தான் எனவே மாத்திரையிலேயே கரைக்க முற்பட வேண்டும்.

தைராய்டு கெவி ஆகிவிட்டால்.இரத்த ஓட்டம் கூட பாதிக்கப்பட்டு,சதைகளில் டிஷ்யூஸ் போல ஃபார்ம் ஆகிவிடும்.அது இன்னும் அதிகமான வலியை கொடுக்கும்.சதை இறுக்கமாகிவிடுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இடுப்பு,கால்களில் பயங்கரமான வலி தோன்றி நடக்கக்கூட முடியாமல் ஆகிவிடும்.


அதனால் ஆரம்ப காலகட்டத்திலேயே தைராய்டை கண்டுபிடித்து சரியான மருந்து உட்கொண்டோம் ஆனால் இது ஒரு சாதாரண நோய் தான் முதிர்ந்துவிட்டால் இது ஒரு கொடிய நோய் ஆகிவிடும்.


இதற்கு அலோபதி மருந்து தவிர,ஆயுர்வேதம்,யுனானி,ஹோமியோ மருந்துகளில் கூட குணப்படுத்தலாம்,நாட்கள் கூடுதல் ஆகுமே தவிர சைடு எஃபெக்ட் ஏதும் நேராது.


அதும் கர்ப்பகாலத்தில் அதிகபட்ச கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் தைராய்டு இருக்கும் பெண்கள்.மாதந்தோறும் இதற்கான ஸ்பெஷல் மருத்துவரை நாடி செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.குழந்தையின் ஆரோக்கியம் பற்றி ஸ்கேன் மூலம் பரிசோதித்துக்கொண்டே வரவேண்டும்.


ஏனெனில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை அம்மாவின் தைராய்டு பிரச்னையால் ஏதாவது ஒரு வகையில் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது.


எனவே கர்ப்பிணிப்பெண்கள் குழந்தையின் வளர்ச்சியை மாதந்தோறும் கவனித்து.போஷாக்கான உணவை டாக்டரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டும்.


மருத்துவத்தை தொடர்ந்து அறிவோம்……..

No comments:

Post a Comment