Thursday 6 June 2013

பெண் முதல்வர் எடுக்கும் முடிவு.. பெண்களுக்கு எதிரான சதி...!


நேற்று மருத்துவமனையில் ஒரு வயதான பெண்மணியை சந்திக்க நேர்ந்தது.

அவங்களா பேச்சை ஆரம்பித்தாங்க..

யம்மா இந்த பொம்பள வந்தா எல்லாமே கஷ்டம் தான்மா….என்றதும்..நான் நெளிந்தேன்.

உடனே ஆமாம்மா…ஒன்னு வெயில் காய்ஞ்சு பஞ்சம் பொழைக்கமுடியாம போகும்,இல்லைன்னா வெள்ளப்பெருக்கு,புயல்னு ஊரே அழிஞ்சு போய் ரொம்ப மக்கள் அவதிப்படுவாங்க..என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.
அப்போது தான் யோசனையே வந்தது.

எப்போதும் ஜெ ஆட்சியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துகொண்டே இருக்கும்.மகாமகம் கும்பாபிஷேத்தில் இருந்து ,கும்பகோண பள்ளி பிள்ளைகள் மரணத்திலிருந்து,சுனாமி வரையில் சொல்லிக்கொண்டே போகலாம்.இவரது ஆட்சியில் ஏற்படும் இன்னல்களைப் பட்டியலிட்டால் இன்னும் இன்னும் ஏராளம்.

ஆனால் ஆட்சிக்காலத்தில் ஏற்படும் இயற்கைக்கு என்ன செய்வது.?என்று கேட்பவர்களின் கவனத்திற்கு….

இதுவரை கும்பகோணப் பள்ளிக்குழந்தைகள் செத்ததற்கு என்ன செய்தார் ஜெ என்று இதுவரை ஒருவர்கூட கேள்வி கேட்டோமா…?

99 குழந்தைகளை பலிகொண்ட அந்த தீ விபத்து நடந்த ஆண்டு தோறும் மெழுகுவர்த்தி ஏந்தி அந்நாளை அனுசரிக்கிறார்கள்.அவ்வளவு தான் நடந்துள்ளது.

அந்நிகழ்ச்சிக்குபின் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் அப்போதைய ஜெ அரசாலயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கும்பகோண குழந்தைகள் இறந்தபோது கல்வி நிலையங்கள் அனைத்து இனிமேல் அரசு அனுமதி பெற்ற கட்டடங்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படும்  என்று சொன்னதில் எதை சரி பண்ணியிருக்கிறார்..இன்னும் சென்னை மற்றும் ஊர்ப்பள்ளிகளில் எத்தனை பள்ளிகள் அனுமதி பெற்று செயல்படுகிறது…?
அல்லது பள்ளிக்கல்வித்துறையில் பெண்களுக்கான முன்னேற்ற விசயங்கள் என்ன கொண்டு வந்தார் நம் பெண் முதல்வர்….?

ஆனால் ,இன்று பெண்கள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியைகளே நியமிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்துவிட்டு அரியாசணத்தில் அமர்ந்து இருக்கிறார்…

அண்ணா,பெரியார் எல்லாம் கொண்டு வந்த ஆண்,பெண் சமம் என்ற உன்னதம் வேண்டும் என்று போராடி நமக்குப்பெற்றுத்தந்த பெண் சுதந்திரத்தை ஒரு பெண் ஆளும் முதல்வர் சாக்கடையில் போடப்பார்க்கிறார்.

பெண் படிக்கும் பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் இருந்தால் தப்பு நடக்கும் என்று தப்பாகக் கணக்குப்போட்டு அதில் பெண் பிள்ளைகளை மீண்டும் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முற்படுகிறார்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஆண்களை ஊரைவிட்டு ஒதுக்கி வச்சால் சரியாகிவிடுமா…?அதற்கு என்ன தீர்வு…?பாலியல் வன்கொடுமை நடக்காமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமோ அதை மேற்க்கொள்ளாமல் பெண் ஆசிரியைகள் மட்டும் நியமனம்…என்றால்…அந்த சங்கடம் ஆண்கள் பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியர்களுக்கு ஏற்படாதா…?என்ன முட்டாள் தனமான அரசு என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.

இன்றைய பெண்கள் எவ்வளவு ஆண்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார்கள்.அவர்களை அடக்கப்பார்க்கிறார்.பெண்கள் அடிமைத்தனத்தை பள்ளிகளில் இருந்து தொடங்கி வைக்கப்பார்க்கிறார்.இது கண்டிப்பாக கண்டிக்க பட வேண்டியது.

இதை எதிர்க்கவில்லையெனில் நம் கண்ணுக்கு முன்னே வளர்ந்துகொண்டு இருக்கும் கல்வி கட்டணங்கள்,ஆங்கிலவழிக்கல்வி,சமச்சீர் கல்வியை அழிக்கபார்த்தல் என்பது போன்றே ஆண் தனி ,பெண் தனி என்ற பாகுபாட்டையும் வளர்த்துக்கொண்டு வருவார்கள் போல..

குழந்தைகளுக்கும்,பள்ளிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கி,அவர்கள் வசதியான சூழலிலும்,அழுத்தம் இல்லாத படிப்பினாலும் வெற்றிக்காண ஒரு முதல்வர் நினைத்தால் தான்.ஒரு பெண் முதல்வர் ஆட்சி வெற்றிகரமாக நடக்கும் இல்லையெனில்,
கல்விக்கெதிராக ஜெ நடத்தும் அரசாட்சியை கண்டு வருடந்தோறும் மெழுகு உருகுவதைபோல்….கல்வியும் உருகிக்கொண்டு இருப்பதைத்தான் கருகிப்போன குழந்தைகளின் மவுனயித்த பார்வையைப்போல நமது பார்வையும் கேள்வியறிவில்லாமல் நட்டுக்கொண்டு இருக்கும்…..

No comments:

Post a Comment