Thursday 11 July 2013

சாமி கும்பிடுவர்களுக்கான சிறப்புக்கட்டுரை...!


சாமியாரின் பிறந்தநாள் அதனால்(?) அன்றே திருமணம் வைத்துக்கொள்ளலாம்.அப்போ தான் தன் பையன் திருமணம் நல்லபடியாக அமையும் என்று ஒரு அம்மா பிடிவாதமாக அதே நாளில் தன் பையனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்தார்.<P>

திருமணம் நல்லபடியாக முடிந்தது.ஒருவாரம் ஓடி இருக்கும்.தன் பையன் வாழ்க்கை சுவாரஸியம் இல்லாததைக்கண்டு விசாரித்த போது,தனக்கு திருமணம் முடித்த பெண்ணுக்கு அவளின் அக்கா கணவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.அதை அறிந்தவுடன் டைவர்ஸ் பண்ணிவிட்டார்கள் அப்பெண்ணை.<P>

இப்பிரச்னையின் காரணமாக தன் பையன் விரக்தியில் இருந்தான் அதை சரி செய்வதற்காக,தன் நம்பிக்கைக்கு உரியவரான சாமியாரின் காலில் விழுந்தார் அப்பெண்மணி.<P>

அவர் தன் வீட்டில் தன் பாதத்தை பதித்தால் தன் கவலை எல்லாம் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்(சாமியார்) வருவதற்காக ஏற்பாடுகள் பண்ண ஆரம்பித்து விட்டார்.அவர் பாதம் வீட்டில் பட கட்டணம் (ஏழு வருடங்களுக்கு முன்) பதினைந்தாயிரம் ரூபாய்.அவருக்கு பாத பூஜை பண்ண இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்.இப்போது ?<P>

சாமியார் வந்தார்,பூக்கள் பரப்பப்பட்டு அதில் தன் பாதத்தை பதித்தபடியே வீட்டிற்குள் வந்தார்..அவருக்கு பாத பூஜையும்  நடந்தேறியது.அந்தம்மா சாமியாரின் பாதத்தில் பால்,சந்தனம்,இளநீர்,என அபிஷேகம் பண்ணினார் தன் கைகளால்.அவரைக்காண அருகில் இருந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணி இருந்தார்கள் அப்பெண்மணியின் வீட்டில்.<P>

சாமியார்  ஒரு வார்த்தை கூட பேசவில்லை.குங்குமம் எடுத்து அந்தம்மாவின் கைகளில் கொடுத்தார்.இனி உன் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் எனக்கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அவரின் வேலையாட்கள் பின்னால் வந்து அந்தம்மாவிடம் பணம் வாங்கிச்சென்றுவிட்டார்கள்.<P>

அன்று மட்டும் அப்பெண்மணிக்கு செலவு ஐம்பாதாயிரம் ரூபாய்.ஆனால் அவரது குடும்பத்தில் நிம்மதி மட்டும் இல்லாமல் போனது இன்று வரை.<P>

இன்னொரு பெண்மணி தன் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால்,சாமியாரின் பாதங்களை தொட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று நினைத்து, வாரம் ஒருமுறை அக்கோவிலுக்குச் சென்று அவரை(சாமியாரை) வணங்கி வருவார்.கருவறைப்பணி செய்தால் குழந்தை கிட்டும் என்று மாதத்திற்கு ஒருமுறை அந்தக் கோவிலை சுத்தி கூட்டி பெருக்கி அம்மனுக்கு அலங்காரம் பண்ணி மனமுருகி வேண்டி வந்தார்.<P>

சில சமயங்களில் தனது கணவர்,மகன், மகள்,மகளின் கணவர் என எல்லோருக்கும் சிவப்பு ஆடை அணியவைத்து அழைத்துச்செல்வார் அக்கோவிலுக்கு.அப்பெண்ணின் மருமகன் பில்டிங் காண்ட்ராக்டர் மிகுந்த பணக்காரர்.அவர் அக்கோவிலை சுற்றி அடிப்பிரதட்சனை பண்ண வைத்தார் அவரின் மாமியார்.அப்போது தான் தனக்கு குழந்தை கிடைக்கும் என நம்பி இதை எல்லாம் செய்தார் மருமகன்.

இன்று வரை அவருக்கு குழந்தை இல்லை.இப்போது மருத்துவரை அணுகி கேட்டால்,டெஸ்டீயூப் பேபி  ஏற்பாடு பண்ணலாம். ஆனால் உங்கள் மனைவி நாற்பது வயதை தாண்டி விட்டதால் குழந்தை சுமக்க அவரது கருப்பையில் சக்தி இல்லை எனக்கூறிவிட்டார் டாக்டர்.<P>

இன்னொரு பெண் தன் கணவர் தினமும் குடிக்கிறார்.அவர் திருந்த வேண்டும் என்பதற்காக தினமும் சாப்பிடாமல் வந்து அம்மாவை(சாமியாரை) தரிசித்துவிட்டு அங்கப்பிரதட்சணை பண்ணிட்டு இருக்கிறார் கடந்த ஒன்பது வருடங்களாக.<P>

ஒரு பெண் தனக்கு இருபத்தி ஏழு வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலையில் அம்மனுக்கு விளக்கு போட்டு,அம்மாவை தரிசித்துவிட்டு(காலில் விழுந்து அழுது)புலம்பிக்கொண்டு இருக்கிறார் கடந்த இரண்டு வருடங்களாக.<P>

கேன்சர் தன் மனைவிக்கு வந்து விட்டது என அறிந்ததும் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.அவரது அலுவலகத்தோழி அக்கோவில் பற்றி கூறி அங்கு தீராத நோயெல்லாம்,அந்த அம்மா கைப்பட்ட போய்டும் நம்பிக்கையா அழைச்சுட்டு போங்க எனக்கூறியதும்,அதை நம்பி தன் மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போவதை விட அதிகமாக இக்கோவிலுக்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார் பாசமிக்க கணவர்.<P>

கடன் தீரவும்,குடும்ப பிரச்னை தீரவும்,கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கவும் அவர்கள் நம்புவது அந்த சாமியையும் சாமியாரையும் தான் என நினைக்கும் போது வேடிக்கையாகவும் சில சமயம் வேதனையாகவும் இருக்கிறது.

அச்சாமியார் வேறு யாரும் அல்ல…அம்மா..அம்மா என்று போற்றுகிறார்களே..அவர்தான் மேல்மருவத்தூரில் இருக்கும் இச்சாமியார்  ஒரு உதாரணம். தான் ஆனால் நிறைய சாமிகளும் சாமியார்களும் ஒவ்வொரு பெயரில் வாழ்ந்து கொண்டும்,சம்பாரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.<P>

அச்சாமியாரின் சொத்துக்கள் மட்டும் பல நூறு கோடியைத்தாண்டும் என்பது கணக்கில் வராத உண்மைகள்.தன்னை சாமியாகக் காட்டிக்கொள்பவர்கள், யாரிடமும் பணம் வாங்காமல் சேவை செய்ய வேண்டும். தன் பக்தையின் வீட்டிற்குள் நுழைவதற்கே இருபத்தைந்தாயிரம் வாங்கி கல்லூரி,மருத்துவமனை,வீடுகள்,நிலங்கள்,வயல்கள் என சொத்துக்கள் சேர்த்துக்கொண்டு நான் கடவுள் என சொல்லிக்கொண்டு திரிவது ஏன்?நான் சம்பாதிக்க வந்து இருக்கேன் என் பிழைப்பு அடுத்தவரை நம்ப வைத்து கழுத்தறுப்பது எனக்கூறி சொத்து சேர்க்க வேண்டியது தானே,இதில் மறைமுக சல்லாபங்கள் வேறு.<P>

அவர்களைக்குறை கூறி என்ன ஆகப்போகுது.அவர்கள் பிளான் பண்ணி சம்பாதிக்கிறாங்க.ஆனா நம்ம மக்கள் இருக்காங்களே?அவங்க நம்பிக்கை என்ற பெயரில் தனது பணத்தையும் செலவு பண்ணி அவர்கள் காலில் விழுந்து பிச்சை கேட்கிறார்கள்.என்ன கொடுமை..?<P>

தீர விசாரித்து பெண் கட்டி இருந்தால் (முதல்) பெண்மணி மகன் மனம் நொந்து போய் இருக்கத் தேவையில்லை.(இரண்டாம்) பெண்மணி தன் மகளை நல்ல மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச்சென்று இருந்தால் விரைவில் குழந்தை பெற்று இருப்பார்.(மூன்றாவது) பெண்மணி கோவிலிலே அதிக நேரம் செலவழித்தால் அவரின் கணவன் குடிக்காமல் என்ன செய்வார்.(நான்காவது

பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற வருத்ததில் தினமும் சாமியாரின் காலில் விழுந்து என்ன பயன் ஆகப்போகுது என அறியாமை இருளால் அப்பெண்ணுக்கு தெரிந்து கொள்ளமுடியவில்லை போலும்.தன் தோழி சொன்னதற்காக மருத்துவமனை அழைத்துப்போகாமல் கோவிலுக்கு அழைத்து வரும் இவர்களை எல்லாம் படித்த முட்டாள்கள் எனக்கூறுவதா?அல்லது தெரிந்தே தவறு செய்கிறார்கள் எனக்கூறுவதா?அல்லது ஏமாந்து போகிறார்கள் எனக்கூறுவதா?

எது எப்படியோ சாமியை கும்பிடப்போய் சாமியார்களைந் நம்பி ஏமாறுபவர்கள் இந்த நாட்டில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தொலைக்காட்சி,பத்திரிக்கைகளின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது.<P>

இதையெல்லாம் எடுத்துச்சொல்பவர்களை,சாமி கும்பிடாமல் விதண்டவாதம் பிடித்தவர்கள்.மூளை இல்லாதவர்கள் எனக்கூறிவிடுகிறார்கள்.<P>

சரி நமக்கென்ன என பலர் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.சிலர் சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்கிறார்கள்….அப்படித்தான் நானுமோ…?<p>

1 comment:

  1. நான் சாமி கும்பிடும் ரகம்.கமெண்ட்ஷ் இல்லை.

    ReplyDelete