Wednesday 7 October 2015

சாமுத்ரிகா லட்சணம் 5

பழக்கமாக போய்க்கொண்டிருந்தது ஒருநாள் எல்லை மீறிப்போய்கிறது.அதாவது,வீட்டில் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ளச் சென்று இருந்ததால்,உடன் வேலை பார்க்கும் அந்தப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அந்தக் கணவர்.

ஒ,இது தான் உங்க மனைவியா,என்று வீட்டில் மாட்டியிருந்த கல்யாண போட்டோவைப்பார்த்து அந்தப்பெண் கேட்டதும்,”ஆமாம்” என்று சொல்லி கண் கலங்குகிறார் கணவர்.

ஏன்..என்ன ஆச்சு ஏன் அழறீங்க,என்றவளிடம்.

நான் என் அப்பா,அம்மா விருப்பத்திற்காகவே தான் இவளைத் திருமணம் செய்துகொண்டேன்.ஆனால் என் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு குணம் கூட,அவளிடம் இல்லை..

எனக்கு மனைவியாக வருபவள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருந்தேனோ முதலிரவு அன்றே அந்தக் கனவெல்லாம் முடிந்து போனது,,அவளுடைய செய்கை எல்லாம் கிராமத்து பெண்கள் நடந்து கொள்வது போல் இருந்தது நான் எவ்வளவோ,விட்டுக்கொடுத்துப் போனாலும்,தினமும் என்னுடன் சண்டை போடுவாள்.

என் வேலை பற்றியோ,எனது முன்னேற்றம் பற்றியோ எதுவும் கவலைப்படாமல்,ஏன் வீட்டுக்கு லேட்டா வர்றீங்க,எங்க போய் சுத்திட்டு வர்றீங்க,உங்களுக்கு என் மேல் அக்கறையே இல்லை.எவளையோ நீங்க வச்சுட்டு இருக்கீங்க.அதான் என் மீது உங்களுக்கு ஆசையே ஏற்பட மாட்டேங்கிறது,என்று என்னை சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பாள்.

தினம் தினம் அவகூட செத்து,செத்து வாழ்ந்துட்டு இருக்கேன் தெரியுமா..?என பொய்யாக கண்களை கசியவிட,உடன் இருந்த அந்தப்பெண்ணும் ஆறுதல் சொல்வதுபோல் அவனை மடியில் சாய்த்துக்கொள்ள,கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் சொன்ன அவளை படுக்கையில் படுக்க வைக்கிறான்.

அவளுக்கும் அவன் மீது ஒரு ஈடுபாடு.தன்னுடைய மேல் அதிகாரி,பணம் அதிகம் வைத்து இருப்பவன்.நமது லைப் ஸ்டையெலுக்கு ஏற்றவனாக இருக்கிறான்.அவனுக்கு ஆறுதலாக இருப்பது போல் நடித்தால் நாம் நினைக்கும் அனைத்தும் நமக்காக செய்வான்.என்று நினைத்தபடி அவன் அணைக்கும் போது சும்மாவே இருந்தாள்.

அவள் அமைதியாக இருந்தது இவனுக்கு சாதகமாக ஆகிவிட்டது.கண்ணீரில் நனைந்த அவன்,பின்னர் முத்தத்தில் அவளை முத்தத்தில் நனைக்க ஆரம்பித்தான்.எல்லாம் முடிந்தது.எழுந்து குளிக்கப்போனவளை,மறுபடியும் இழுத்து அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு,தேங்க்ஸ் என்கிறான்.
அவளும் வித் மை ப்ளஸர்.என்கிறாள்.

அடுத்து.. அடுத்து…இந்த உறவு தொடர்கிறது.

மூன்று மாதங்களும் இப்படித்தான்..ஒருநாள் வீட்டில் இருவரும் கட்டியணைத்து படுத்துக் கொண்டிருக்கும் போது,வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது.

கதவின் ஓட்டையில் பார்க்கும்போது,தனது மனைவி கையில் குழந்தையுடனும்,மனைவியின் அப்பா,அம்மாவும் வெளியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

பயந்தவன்,பெட்ரூமுக்குள் சென்று அவளை எழுப்பி,டிரஸையும் அவளையும் பாத்ரூமுக்குள் தள்ளினான்.

பின்னர் கதவை திறந்து”என்னமா இது,நான் வந்து உன்னை அழைத்து வருகிறேன்னு சொன்னேன்ல,அதற்குள் ஏன் கிளம்பி வந்த என்று கேட்டவனிடம்,

ஆமா குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது.நீங்க ரெண்டு தடவை தான் வந்து பார்த்தீங்க.போனில் பேசினால் கூட வேலையில் இருக்கேன் அப்புறமா பேசுறேன்னு சொல்றீங்க.உங்களப்பார்க்காமல் இருக்க முடியல.அதான் நீங்க எப்போ வந்து கூப்பிடுறது,நான் எப்போ வர்றது…?அதான் நானே அப்பா,அம்மாவுடன் வந்துட்டேன்.என்றாள்.

குழந்தையைப்பிடிங்க,நான் பாத்ரூம் போய்ட்டு வர்றேன்,என்றவளிடம்,இரும்மா நான் பாதி குளிச்சுட்டு இருக்கும் போது கதவு தட்டியதும் உடனே வந்துட்டேன்.நல்லா குளிச்சுட்டு வர்றேன்.அத்தை,மாமா நீங்க உட்காருங்க,இத்ப்ப் வந்துடுறேன்.

என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் கணவன்,அங்கே ஆடையணிந்து ரெடியாக இருந்த காதலியை,அவளின் சாலையும்,இவனது கைலியையும் கட்டி பாத்ரூம் ஜன்னல் வழியாக அவளை இறக்கிவிட்டு,கால் பண்றேன்.பை பை…என கையாட்டிவிட்டு,தன் கைலியை கட்டிக்கொணுட் வெளியே வந்தான்.

சொல்லுங்க மாமா பயணம் எல்லாம் எப்படி இருந்தது.குழந்தையை என்கிட்ட கொடு,என்று மனைவியிடம் வாங்கி மடியில் வைத்து,செல்லக்குட்டி,அப்பாவை பார்க்க வேண்டும் என்று அவசரமா வந்துட்டீங்களாடி,என் கன்னுக்குட்டி என்று கொஞ்சினான்.

பாத்ரூம் சென்ற மனைவி”என்னங்க…”என்று கூப்பிட்டதும்,அதிர்ந்தான்…..

அதிர்ந்தது எதனால் என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்..!

பாத்ரூமுக்குள் இருந்து மனைவிஏங்கஎன்று குரல் கொடுத்ததும் அதிர்ந்து போன கணவன்.குழந்தையை அவனது மாமாவிடம் கொடுத்துவிட்டு,அவசரமாக என்ன ஆச்சு என்று கேட்டபடி பாத்ரூமை எட்டிப்பார்த்தான்.


என்னங்க இது..?பாத்ரூம்ல என்ன பெண்கள் போடுற ஜட்டி இருக்கு என்று கேட்டாள் மனைவி.


பயந்த கணவன் சற்று சிந்தித்து,உடனே ஆமாம்மா,நேத்து மாடில என் துணிய துவைச்சு காயப்போட்டு,இரவு எடுக்கும் போது,இருட்டுல,என் துணியோட,இந்த ஜட்டியும் வந்துடுச்சு.கொடுக்கனும்னு நினைச்சேன்.ஆனா யாரோடதுனு தெரியல,அதான் பாத்ரூம்ல போட்டு வச்சேன்.என்று சமாளித்தான்.


அப்படியா சரி ,நானே நம்ம பிளாட்ல யாரோடதுனு கேட்டு கொடுத்துடுறேன்.என்றாள் மனைவி.


திரும்ப இவனுக்கு பயம் அதிகமாயிடுச்சு,அய்யோ பிளாட்ல யாரிடமாவது கேட்டு இல்லைனு சொல்லிட்டா என்ன பண்ணுவது,நான் அனுப்பி வச்சவ,நல்லபடியா வீட்டுக்குப் போய் சேர்ந்தாலனு தெரியல.முதல்ல ஆபிஸ் கிளம்பிப் போய்.அவகிட்ட கேட்கனும்.என்று யோசித்தபடி இருந்தான் கணவன்.


சகஜமாக இல்லாமல்,சம்பிராதயத்திற்கு எல்லோரிடமும் பேசிவிட்டு,ஆபிஸ் கிளம்பியவனை ஏங்க, இன்னைக்குத்தான் நாங்க வந்து இருக்கோம்,குழந்தையை இன்னைக்காவது ஆசை தீர கொஞ்சுங்க,அதோட எங்க அப்பா,அம்மா வேற இருக்காங்க.மளிகை சாமான் ஒன்னு கூட இல்ல,எல்லாம் வாங்கனும்,அதுனால இன்னைக்கு ஒருநாள் லீவு போட்டு எங்க கூட இருக்கக்கூடாதா என்றாள் மனைவி.


இல்லம்மா,அந்த வேலையை இன்னைக்கு முடிச்சாகனும்,நான் போய் முடிச்சுட்டு எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு,மனைவியை பெட்ரூமில் வைத்து நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான் கணவன்.


வேலை பிஸியாக இருக்கும் போல அதான் கிளம்பிட்டார்,பாவம்.என நினைத்துக்கொண்டே..,


No comments:

Post a Comment